மார்ச் 8

Posted by அகத்தீ Labels:




மார்ச் 8
சர்வதேச உழைக்கும்பெண்கள் தினம்

ஒரு வேண்டுகோள்


னக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள்; பராமரிக்க...
துணிகள் இருக்கின்றன; தைக்க...
தரை கிடக்கிறது; துடைக்க...
தோட்டம் அழைக்கிறது; குப்பைகளை அகற்ற...
உடைகள் காத்திருக்கின்றன; இஸ்திரி போட...

ன்மேல் மிளிர்வாய் பிரகாச சூரியனே!
என்மேல் விழுவாய் மென்மையின் பனித்துளியே...
என்னை உன் வெண்குளிர் முத்தங்களால் மூடு...
இன்றிரவு மட்டும் என்னை ஓய்வெடுக்க விடு...

 - மறைந்த ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞர்  மாயா ஏஞ்சலோ எழுதியது. மொழியாக்கம் யாரெனத் தெரியவில்லை . பாரதி பாஸ்கர் கட்டுரையூடே கண்டெடுத்தது .


நான் !
தேவதையும் அல்ல,
பிசாசும் அல்ல,


ன்னை,
போற்ற வேண்டாம்,
புகழ வேண்டாம்,
வர்ணிக்க வேண்டாம்,
ஆறுதல் மொழிகள் வேண்டாம்,
கொண்டாட்டம் வேண்டாம்,
கண்ணீர் வேண்டாம்,

நான்!
தேவதையும் அல்ல,
பிசாசும் அல்ல,

னக்கு,
வாக்குறுதிகள் வேண்டாம்,
வாழ்த்துகள் வேண்டாம்,
பரிசுகள் வேண்டாம்,
பாராட்டு வேண்டாம்,
மாலைகள் வேண்டாம்,
மகுடங்கள் வேண்டாம்,




நான் !
தேவதையும் அல்ல,
பிசாசும் அல்ல,

ன்னை,
தோளில் தூக்கி
சுமக்கவும் வேண்டாம்,
காலில் போட்டு
மிதிக்கவும் வேண்டாம்,


நான்!
தேவதையும் அல்ல,
பிசாசும் அல்ல ,





நீ !
மனிதன்.
நான்!
மனுஷி.
அந்த நினைவிருக்கட்டும் எப்போதும்,
அது போதும் !!

- சு.பொ.அகத்தியலிங்கம்.





0 comments :

Post a Comment