Posted by அகத்தீ Labels:

 



கணணுக்கெடிய தூரம் வரை ஒளிக்கீற்றுத் தெரியவில்லை .

இருட்டு என்பதும் குறைந்த ஒளிதான் ; கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொன்றாய் புலப்படும் .

தேவை ; கொஞ்சம் நம்பிக்கை ,கொஞ்சம் தைரியம் , நிறைய ஞானம் .

இதுவரை கடந்ததைவிட , பல மடங்கு கொடிய பாதையே நம்முன் விரிகிறது.

முடங்க முடியாது .அடிபணிய முடியாது . முட்டி மோதி நடந்து கொண்டே இரு !

முடிந்தவரை கூட்டம் சேர்த்துக் கொள் ! எல்லோரும் கடைசிவரை வருவார்கள் என எதிர்பார்க்கதே !

அவரவர் சக்திக்கு ஏற்ப , புரிதலுக்கு ஏற்ப வருவதுவரை வரட்டும் !

மயக்கம் தெளியாவிட்டால் மரணம் . மயக்கம் தெளிந்துவிட்டால் விழிப்பு...

நட ... பேசு ... ஓடு ... கத்து .... இன்னும் ... இன்னும் ... இன்னும் ... இன்னும் ....


சுபொஅ.

0 comments :

Post a Comment