Posted by அகத்தீ Labels:

 




கீழ்வானில் சூரியன் உதிக்கும் நொடியில்

மெல்ல ஜன்னலில் வந்தமர்ந்து

கொஞ்சிக் கொண்டிருக்கும் ஜோடிப்புறாக்கள்

இரவு சரியாகத் தூங்கி இருக்குமோ ?

 

நேற்று இரவு முழுவதும் தூக்கத்திலும்

விழித்து விழித்து குரைத்த நாய்கள்

விடியும் முன்பே ஓடத்  துவங்கிவிட்டன

என்ன அவசர வேலையோ ? யாரறிவார் ?

 

நிற்காமல் ஊர்ந்து கொண்டே இருந்தன

வரிசை மாறா எறும்புகள்

ஒரு வேளை வானிலை அறிக்கையைக் கேட்டு

தூங்காமல் இடம் பெயர்கிறதோ ?

 

இரவிலும் தூங்கி பகலிலும் தூங்கி

வாழ்வையும் நாட்டையும்

கோட்டை விட்டுக்கொண்டிருக்கிறானே

இந்த பாழும் மனிதன் ....

 

சுபொஅ.

 

 

 

 

0 comments :

Post a Comment