கீழ்வானில் சூரியன் உதிக்கும் நொடியில்
மெல்ல ஜன்னலில் வந்தமர்ந்து
கொஞ்சிக் கொண்டிருக்கும் ஜோடிப்புறாக்கள்
இரவு சரியாகத் தூங்கி இருக்குமோ ?
நேற்று இரவு முழுவதும் தூக்கத்திலும்
விழித்து விழித்து குரைத்த நாய்கள்
விடியும் முன்பே ஓடத் துவங்கிவிட்டன
என்ன அவசர வேலையோ ? யாரறிவார் ?
நிற்காமல் ஊர்ந்து கொண்டே இருந்தன
வரிசை மாறா எறும்புகள்
ஒரு வேளை வானிலை அறிக்கையைக் கேட்டு
தூங்காமல் இடம் பெயர்கிறதோ ?
இரவிலும் தூங்கி பகலிலும் தூங்கி
வாழ்வையும் நாட்டையும்
கோட்டை விட்டுக்கொண்டிருக்கிறானே
இந்த பாழும் மனிதன் ....
சுபொஅ.

0 comments :
Post a Comment