தேஷ் பக்த்

Posted by அகத்தீ Labels:

 


கோவணம் கட்டியவர்களை

பைத்தியக்காரர்கள்

எனச் சொல்லும் ராஜா

நிர்வாணமாக இருக்கிறார்

எனச் சொல்வதுதான்

தேசவிரோதம் !

 

நிணம் ஒழுகும் வாயை

துடைத்துக்கொண்டே

‘சாந்தமூர்த்தி’ என

தனக்குத்தானே

சொல்லிக்கொள்ளும் ராஜாவை

மோசடிக்காரன் என்பவன் நிச்சயம்

தேசவிரோதியே !

 

“ராம் ! ராம் “ “சிவ ! சிவ !”

நாமம் ஜெபித்தபடி

நச்சை ஊரணியில் ஊற்றும்

உத்தமன் பெயர் பாடி !

விஷ்வகுருவென தாழ்பணிவதே

தேஷ்பக்தி !தேஷ்பக்தி ! தேஷ்பக்தி !

 

சுபொஅ.

16/09/25.


0 comments :

Post a Comment