“சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம்” வேண்டும்
என்று கம்யூனிஸ்டுகளும் விசிகவும் கேட்டால் , அது ஏதோ “ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிரான சட்டம்” கேட்கிறார்கள் என சில சாதிவெறியர்கள் நடுங்கிப் பதிவு போடுகிறார்கள் . இன்னும் சிலர் உங்கள் ஒட்டு
வங்கிக்கு வேட்டுவைத்துக் கொள்ளாதீர்கள் என புத்தி சொல்கிறார்கள் ! உண்மை என்ன ?
சாதி ஆணவப்
படுகொலை ஒரு குறிப்பிட்ட சாதி இன்னொரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராக செய்வது மட்டுமல்ல
; எல்லா சாதியிலும் நடக்கிற கொடுமை ஆகும் . தலித்துகளுக்குள்ளும் சாதி ஆணவப் படுகொலை
நடக்கிறது . பிற்படுத்தப்பட்டோருக்குள்ளும் நடக்கிறது . இரு சாராருக்கு இடையிலும் நடக்கிறது .உயர் சாதியினர்
எனச் சொல்லிக் கொள்வோருக்குள்ளும் வெளியேயும் நடக்கிறது .
ஆகவே எந்தச்
சூழலில் நடந்தாலும் அது ஆணவப் படுகொலையே . சட்ட ரிதியான திருமண வயதை எட்டிவிட்ட எந்த
ஆணோ பெண்ணோ தான் விரும்புகிற இணையைக் கைப்பிடிக்கிற உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு
. அதைத் தடுக்கிற கொலை செய்கிற எல்லாமும் ஆணவக் கொலையே !
இதை உரக்கச்
சொல்வதனால் ஒட்டுவங்கிக்கு பாதிப்பு எனில் அதைப் பொருட்படுத்தாமல் சமூக நலனை முன்னிறுத்தி
செயல்படுபவர்களே கம்யூனிஸ்டுகள் . ஆட்டு மந்தை போல் பின்னால் போவதல்ல தலைமை .ரயில்
எஞ்சினாய் முன்னே வழிநடத்திச் செல்வதே தலைமை .
சுபொஅ.
18/09/25.
0 comments :
Post a Comment