முன்னேறிவிட்டோம் !

Posted by அகத்தீ Labels:

 


 

முன்னேறிவிட்டோம் !

 

 

சோள வயல்கள் வீடுகளாகிவிட்டன

ஏரி தண்ணீர் ரசாயணக் கழிவு நீராகிவிட்டது

பட்ட மரங்கள் எலும்பு தெரிய நிர்வாணமாய்

புறாக்கள் ,குருவிகள் ,நாரைகள் ,கழுகுகள் ,

எல்லாம் எங்கே போய்த் தொலைந்தன

குற்ற உணர்ச்சி ஏதும் இன்றி

வெயிலைச் சபித்துக் கொண்டிருந்தான்

AI செயற்கை அறிவை விரலால் தடவி

கண்களால் மேய்ந்து கொண்டிருந்தான்.

தொண்டை வறண்டு கொண்டிருந்தது

இன்னும் தண்ணீர் லாரி வந்து சேரவில்லை .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

25/4/2024.

 

 


0 comments :

Post a Comment