பிரார்த்தனையும் புதிய பிரார்த்தனையும்

Posted by அகத்தீ Labels:



#பிரார்த்தனையும் புதிய பிரார்த்தனையும்

கொடுங்கோல் மன்னன் துறவியிடம் கேட்டான்;
“ பிரார்த்தனைகளிலே மிகச் சிறந்தது எது ?”

துறவி சொன்னார் ;
“ உங்களைப் பொறுத்த மட்டில் உறக்கம்தான்.”

மன்னன் விழித்தான்…

துறவி சொன்னார் ;
“நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதாகிலும்
மக்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கிறார்கள் அல்லவா ?
அதனால்தான்..”

இது சா அதியின் பாரசீகக் கவிதை .மொழியாக்கம் என்.ஆர்.தாசன்.
அன்றைக்கு எழுதிய கவிதை .இன்றைக்குப் பொருந்துமா ?

“மன்னரோடு துறவியும் உறக்கம் என்கிற உயர் பிரார்த்தனையில் ஈடுபடட்டும் . அப்போதாலும் மக்கள் கொஞ்சம் மூச்சுவிட அவகாசம் கிடைக்கும் அல்லவா ?”
என திருத்தம் சொன்னாள் சிஷ்யை .

சு.பொ.அகத்தியலிங்கம்.
27 செப்டம்பர் 2019.

0 comments :

Post a Comment