தலைப்பை நீங்களே சூட்டிக்கொள்ளுங்கள்

Posted by அகத்தீ Labels:



தலைப்பை நீங்களே சூட்டிக்கொள்ளுங்கள்


சு.பொ.அகத்தியலிங்கம் .


இரவின் நிசப்தம் கொடூரமாய் உறுத்தியது
நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையில்
ஒவ்வொரு நொடித்துளியும் நகர்ந்தது
தூங்கிக் கொண்டிந்தேன் ஆனால் தூங்கவில்லை
விழித்துக் கொண்டிருந்தேன் ஆனால் விழித்திருக்கவில்லை
என் இதயத்துடிப்பை நான் கேட்கிறேன்
அது ஏன் சீறிப் பாய்ந்து  ஆர்ப்பரிக்கிறது ?
மூளைக்குள் யாரோ குண்டு வைத்துவிட்டார்கள்
ஒருவேளை அந்நிய நாட்டுச் சதியாக இருக்குமோ ?
நேற்று படித்த செய்திகள் ஒவ்வொன்றாய்
காற்றில் புரண்டு புரண்டு அச்சுறுத்துகிறது
மாண்புமிகு இதயங்கள் மரத்துப்போன தேசத்தில் – இனி
மனச்சாட்சிக்கும் காவி வர்ணம் பூசாவிடில் தேசவிரோதி என்பார்களோ ?
மநுவைக் கொண்டாடி மநுவுக்கு அடிபணிந்து இழிவைச் சுமந்து
செயலற்று இருப்பதைவிட செத்துப்போவது மேலல்லவா ?
அந்த மரணத்துக்கும் வலிமை இருக்கும் !!!!

23.01.2016



0 comments :

Post a Comment