புரட்சி எப்போது ?

Posted by அகத்தீ Labels:







புரட்சி எப்போது எழும் ?
இளமையை அலைக்கழித்த ஓயாத கேள்வி .

சமூக அறிவியல் வசப்பட்டபோது
மனதும் மூளையும்
விடை தேடவும் விடை சொல்லவுமாய்
கழிந்தன நாட்கள்.

இன்னும் இற்றுப்போகாத
புரட்சிக் கனவுகளுடன்
எஞ்சிய நாட்கள் நகர்கிறது .

புரட்சி என்பது வெறும் கனவா ?
எத்தனை காலம் காத்திருப்பதோ ?

வசந்தம் எல்லோருக்கும் பூக்கும் வரை
வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்கும் வரை
புரட்சி என்பது கனவல்ல
புறக்கணிக்க முடியா  பெரும்தேடல் ….

புரட்சி என்பது வெறும் நம்பிக்கை அல்ல
மானுட நேசத்தின் மாறா இயக்கம் .

தாமதப்படலாம்
தடுக்கவும் முடியாது
தவிர்க்கவும் இயலாது

காலமென்னும் பெருவெளியில்
இக்காத்திருப்பு என்பது சிறுதுளியே !


0 comments :

Post a Comment