கடவுளும் அரசியலும்
“எங்கே தொட்டாலும்
முட்டுமிடம் அரசியலாக இருக்கிறதே!
இறைவா ! இது என்ன சோதனை ?...”
“ போடா ! முட்டாள்
நானும் சிக்கித் தவிக்குமிடம் அதுதான்
விடுதலை எந்நாள் ?”
“ இறைவா ! எங்களுக்குதான் கதியில்லை
அகப்பட்டுத் தவிக்கிறோம்
உனக்குமா புத்தியில்லை ?”
“ புத்தியிருந்தால்
கற்பனையில் எனைப் படைத்த
உங்களை நான் படைத்திருப்பேனா ?”
“ இறைவா ! புத்தி தெளிய
உன்னை வணங்குவார்- நீயே
எம் புத்தியை பேதலிக்கச் செய்யலாமா ?”
“ நீ புத்தியைத் தொலைத்ததற்கு
நான் எப்படி பொறுப்பாவேன் ! – என்னை
அரசியலில் சிக்க வைத்ததும் நீதானப்பா !”
“ இறைவா ! நீ எதற்கும் பொறுப்பில்லையா ?
ஏன் இப்படி நழுவுகிறாய் – உன்
பக்தனிடம்கூடவா திருவிளையாடல் ?”
“ போடா ! முட்டாள் ! நானென்ன
ஏ பி நாகராஜனா தனுஸா திருவிளையாடல்
சினிமா எடுக்க ! கொஞ்சமாவது யோசி !”
“ இறைவா ! உன்னை நம்பியதற்கு
என்னை செருப்பாலடிக்கணும் – நீ
பிடித்தால் சாமி வழிச்சா சாணி ….”
“ லேட்டாக வந்தாலும் புத்தி வந்திருக்கு
அதிலும் அரசியல் பண்ணும் உன்னை
ஒரு போதும் திருத்தவே முடியாது போடா ! போ …”
“ இப்படி எல்லாம் நீ பேசுவதால்தான்
அப்பனே ! உன்னை ஆற்றில் குளத்தில்
தூக்கி எறிகிறோம் … எங்க அரசியலே தனி…”
[ இவனுகளிடம் மாட்டிச் சாகிறதா, இல்லை நாமே தற்கொலை செய்து கொள்கிறதா என இறைவன் குழம்பி நின்றான்….]
சுபொஅ.

0 comments :
Post a Comment