திமாகி …. திமாகி …. வெல்லும்….

Posted by அகத்தீ Labels:

 







திமாகி …. திமாகி …. வெல்லும்….

 

காலில் விலங்கு

கையில் விலங்கு

வாயில் விலங்கு

போட்ட ராஜக்கண்ணு

மூளைக்கு விலங்கு

போட முடியாமல்

முழிக்கிறார்  !

 

ஆளைப் பிடித்து

சிறையில் போடலாம்

ஆயுள் முழுமைக்கும்

அடைத்து வைக்கலாம்

சோறு தின்னவும்

கைகால் கழுகவும் மட்டும்

விலங்கைக் கழற்றலாம்

சிந்தனையை அடைத்துவைக்க

சிறைக் கம்பிக்கும் வலுவில்லையே !

 

திமாகி வெல்லும் ! திமாகி வெல்லும் !

சித்தாந்தம் தோற்ற வரலாறு இல்லை !!

 

சு.பொ.அ.

 

0 comments :

Post a Comment