முகநூல் வில்லங்கம்.
முகநூல் எனப்
பெயர் வைத்தது ஏன் எனத் தெரியாது .
ஆனால்
பலரின் உண்மை
முகம் அங்கேதான் பல்லிழிக்கிறது.
முதலில்
முகமூடியோடுதான்
நுழைகிறார்கள்
மெல்ல மெல்ல
முகமூடி
கழன்றுவிழ
அம்மணமாய் காட்சி தருகிறார்கள் .
அவர்கள்
மென்மையாகப்
பேசுகிறார்களா
வன்மையாகப்
பேசுகிறார்களா என்பதைவிட
எதற்காகப்
பேசுகிறார்கள் என்பதே முக்கியம் .
அவர்கள்
சாக்கடையை
வீசுவதும்
சாதுரியமாய்
பேசுவதும்
நம்பவைத்து
கழுத்தறுக்கத்தான் .
வெட்ட வெட்ட
வேறுவேறு
பெயர்களோடு
அவர்கள்
வில்லங்கம்
செய்கிறார்கள்
அவர்களின்
கண்ணீருக்கும்
சிரிப்புக்கும்
கோபத்துக்கும்
ஆமாம்சாமிக்கும்
பின்னால்
ஓர் அரசியல் ஒளிந்தே இருக்கிறது.
இதனை
அறியாதவரை
நீ அரசியலில்
ஏமாளியே !
என்ன செய்வது?
இவர்களுக்கு
மத்தியில்
நீ களமாடித்தான்
ஆகவேண்டும்
அது உன் சாமர்த்தியம்
!!
சுபொஅ.
02 /01
/26.

