மின்னலும் இடியும்

Posted by அகத்தீ Labels:

 


மின்னலும் இடியும்

வானத்தைக் கிழித்துப் போடுகிறது

மழை கொட்டுகிறது.

 

கிழித்த வானத்தை

டக்கென யார் தைத்தது ?

மழை சட்டென நிற்கிறது .

 

மீண்டும் இதே விளையாட்டு

கிழிப்பதும் தைப்பதுமாய்

 

மண்டையைப் பிளப்பதுபோல்

வெடிக்கிறது இடி

கண்ணை மூடவைக்கிறது மின்னல்

பயமில்லைதான்…

 

ஆனால்,

இடி வெடிக்கும் போது

ஓடிவந்து கட்டிப்பிடிக்கும்

பேரன் பேத்திகள்

வெளிநாட்டில் இருக்கும் போது

இந்த தனிமை

பயமுறுத்துகிறதோ ?

 

 

நான் இணையரைப் பார்க்கிறேன்

அவள் என்னைப் பார்க்கிறாள் !

 

சு.பொ.அ.

22/5/2023 இரவு 7.30 மணி,


0 comments :

Post a Comment