பலப்பல வண்ணங்களில்

Posted by அகத்தீ

 


பலப்பல வண்ணங்களில் பூக்கள் சிரித்தன

வண்ணத்துப்பூச்சிகள் சிறடித்தன

பூங்கா நடுவே குட்டிபிசாசுகள்

ஆடி , ஓடி , ஏறிக் குதித்து விளையாடின

கூச்சல், மகிழ்ச்சி, கலகலப்பு

 

 

அங்கே ஐம்பது குட்டிப் பிசாசுகள்

ஆனால் ஒருப்போல் இல்லை

ஆண் ,பெண் ,கறுப்பு ,சிவப்பு ,மாநிறம்

சுரண்ட முடி , செம்பட்டைத் தலை ,

ஒழுகின மூக்கு , திக்குவாய் , சூம்பிய கால்

குட்டிப்பிசாசுகள் காய்விட்டன , பழம்விட்டன

எல்லாம் நொடிக்கு நொடி மாறின

ஒரு போதும் வெறுக்கவில்லை

 

 

அங்கே ஓர் மனித சங்கி வந்தார்

 “ நீ ஓரம் உட்கார் ! நீ அவனோடு சேராதே !

அவன் உனக்கு சமம் அல்ல ! நீ மட்டுமே மேலானவன் !”

குட்டிப் பிசாசுகளைக் கூறுப்போட்டார்.

 

 

 

வெற்றிக் களிப்புடன் வாசலைத் திறந்தார்

ஒற்றைக் காலை வெளியே வைத்தார்

 

 

குட்டிப் பிசாசுகள் ஒன்றாய்ச் சேர்ந்து

குலவையிட்டன .. கும்மாளமிட்டன

மனிதனைவிட பிசாசுகள் மேல் !!!

 

 

சுபொஅ.

 

[ இது ஓர் உண்மை நிகழ்வுசார் புனைவு ]

 


0 comments :

Post a Comment