எதைத் தேடுகிறாய்?

Posted by அகத்தீ Labels:




இருட்டில் எதைத் தேடுகிறாய்?
இதயத்தைத்தான்
ரொம்ப சரி ! அது அங்கேதான்
எப்போதும் இருக்கும்

மாடமாளிகையில் அதிகார நாற்காலியில்
பகலிலும் காணக்கிடைக்காது
உபதேசிகள், மூளைவீங்கிகள்,வாடகை வாயர்கள்
எப்போதோ தொலைத்துவிட்டனர்

கொடுப்பதற்கு ஏதுமில்லாதவர்களிடம்
இதயம் இருக்கிறது அதில் ஈரம் இருக்கிறது
வெறுங்கையால் முழம்போட முடியாது
போராட முடியும் ! இதயம் வலுவாய் இருக்கிறது!!


சுபொஅ.

0 comments :

Post a Comment