அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

Posted by அகத்தீ Labels:






அவர் பொய் சொல்ல மாட்டார் !!!





ஆளுநர் சிவப்பாய் இருக்கிறார்
அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

குழந்தை அழும் சத்தம்கூட
அமைதியைக் குலைக்கக்கூடாது
என்பதற்காகவே
பெல்லட் குண்டுகளால்
குழந்தையைக்கூட மவுனிக்கச் செய்யும் !
காஷ்மீர் பனிமலையில்…

ஆளுநர் சிவப்பாய் இருக்கிறார்
அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

ராகுலும் ,யெச்சூரியும் ,ராஜாவும்
திருச்சி சிவாவும் இன்னபிறரும்
உள்ளே நுழைந்து
மயாணத்தை
அமளி துமளி ஆக்கவிடலாமா ?

ஆளுநர் சிவப்பாய் இருக்கிறார்
அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

சு.பொ.அகத்தியலிங்கம்
25 அக்டோபர் 2019.


0 comments :

Post a Comment