இன்று – நாளை- இன்றே….

Posted by அகத்தீ Labels:


இன்று – நாளை- இன்றே….

இன்று
நீக்கியது சரிதானே
அவர்களுக்கு ஏன் தனி அந்தஸ்த்து ?

நாளை
சட்டம் சரிதானே
நாட்டுக்கு ஒரு அதிபர் போதும்
மாநிலத்துக்கு மாநிலம் முதல்வர் ஏன் ?

நாளை
சட்டம் சரிதானே
தராதரம் இல்லாதனுக்கெல்லாம்
இடஒதுக்கீடு அவசியம் இல்லையே

நாளை
சட்டம் சரிதானே
தேவ பாஷை சமஸ்கிருதம் இருக்க
வீட்டில்கூட நீஷ பாஷை தமிழ் பேசலாமோ

நாளை
சட்டம் சரிதானே
முதலாளிக்கும் மேல்குடிக்கும்
மட்டும்தானே இந்தியா
பஞ்சை பராரிகளும் சூதிரர் பஞ்சமர்களும்
பங்கு கேட்பதில் என்ன நியாயம் ?

இனியும் மவுனியாகலாமோ
இன்றே
மூளை இருப்பவன் யோசிக்கக் கடவன்
உணர்ச்சி இருப்பவன் விழித்தெழக் கடவன்
வாயிருப்பவன் கண்டிக்கக் கடவன்
மனிதனாயிருப்பவன் போராடக் கடவன்!!!!

சு.பொ.அகத்தியலிங்கம்.
6 ஆகஸ்ட் 2019.

0 comments :

Post a Comment