அமைதியின் ஜாதகக் குறிப்பு

Posted by அகத்தீ Labels:




அமைதியின் ஜாதகக் குறிப்பு

அவன் அமைதியாக இருக்கிறான் .
அதோ பாருங்கள்

கண்கள் இமைக்கவில்லை .
உதடு அசையவில்லை .
மூச்சுக்காற்றும் வெளிப்படவில்லை
கைகால் அசையவில்லை

அவன் அமைதியாக இருக்கிறான் .
அதோ பாருங்கள்


பசி இல்லை .சிறுநீர் ,
மலம் கழிக்கவில்லை.
காதல் ,காமம் எதுவும் இல்லை
கவலை இல்லை .சிந்தனை இல்லை

அவன் அமைதியாக இருக்கிறான் .
அதோ பாருங்கள்


யாரோடும் பேசவும் இல்லை
சண்டை போடவும் இல்லை
தூங்கவும் இல்லை
விழிக்கவும் இல்லை

அவன் அமைதியாக இருக்கிறான் .
அதோ பாருங்கள்


அசைவற்று அமைதியாய்
கிடக்கிறான்

நீங்கள்தான் தேசபக்தியின்றி
பினம் ,சவம் ,மயாணம்
என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி
வசைபாடுகிறீர் எம் இனிய காஷ்மீரை !!!!

சு.பொ.அகத்தியலிங்கம் .
14 ஆகஸ்ட் 2019.

0 comments :

Post a Comment