இதயத்தில் ஈரமும் நம்பிக்கையும்

Posted by அகத்தீ Labels:



இதயத்தில் ஈரமும் நம்பிக்கையும் 





யுகந்தோறும் மாறுதல் என்பது பழங்கனவாச்சு
கணம்தோறும் மாற்றம் என்பதே நிகழ்காலமாச்சு .
ஈடு கொடுக்க எங்கும் எதிலும் பெரும் போராட்டம்
எல்லோருக்கும் எதையோ இழந்த திண்டாட்டம்  

லாபவெறி பெரும்பசி நுகர்வுவெறி பெரும்பசி
பதவிவெறி பெரும்பசி பணவெறி பெரும்பசி
வெறிகொண்ட பூதத்தை மேலும்  வெறியேற்ற
சாதிவெறி மதவெறி இனவெறி  போதையுச்சம் !

தீயவர் நானென திமிருடன் தெருவினில் ஆட்டம்
ஊரவர் அவர்முன்  கிடந்தனர் நைந்ததுணியாட்டம்
மூளையிடுக்கெலாம் அப்பியது பயம் , மூடத்தனம்
இதயத்தில் ஈரமும் நம்பிக்கையும் மிஞ்சுமோ இனி

மாறுதலின் வேகத்தை எதிர்கொண்டு புதிதாக்கி
மானுடத்தை வாழவைக்க வீயூகத்தை புதிதாக்கி
நொடிதோறும் நொடிதோறும் ஆதிக்க சதியை
பொடியாக்கி புழுதியாக்கி முன்னேறு புதிதாக !!

சு.பொ.அகத்தியலிங்கம்.
28
ஜூலை 2019


Top of Form


0 comments :

Post a Comment