அவர்கள் பேசட்டும் ..

Posted by அகத்தீ Labels:



Top of Form
Bottom of Form


பேசட்டும் அவர்கள் !!!
============================

பேசட்டும் அவர்கள் !
வெளிப்படுவது ஆணவமோ அறியாமையோ மட்டுமல்ல ,
நரம்பில் குருதியில் உறைந்து போயுள்ள
ஆணாதிக்கத் திமிரும் கூட

அவர்கள் தானாகவா பேசினார்கள் ?
இல்லவே ! இல்லை!
பிறந்தது முதல் மூளையில் தூவப்பட்ட ஆதிக்க விதை
போதனைகளால் கதைகளால் செயல்களால்
உரம்போட்டு நீர்பாய்ச்சி ஊட்டிவளர்த்த விஷச்சிந்தனை
திரும்பும் இடமெல்லாம் திரும்பத் திரும்பத்
திணிக்கப்பட்ட கருத்துருவாக்கம்.

பேசியது அவர்கள் மட்டுமா ?
லோககுருக்கள் , சந்நியாசிகள்
முல்லாக்கள் , பாதிரிமார்கள் ,
கலாச்சார வேஷமிடும் அடியாட்கள்
அரைடவுஸர் ஆசாமிகள்
எல்லோரும்தான் ..

அவர்களை பேசவைத்தது யாரோ அல்ல ? எதுவோ அல்ல
பெண்கள் பாவயோனியில் பிறந்தவரென்றிடும்
கீதா உபதேசம்
பெண்ணை ஆணுக்கு கீழ்படிந்தவரென்றிடும்
வேதாகமம்
பெண்ணை ஆணுக்கு கீழ்படிந்தவராக்கிய
குரான்
பெண்ணை மாயப்பிசாசமாய் சித்தரித்த
சமய போதனைகள்
எல்லாம் எல்லாம்தான்


பேசட்டும் அவர்கள் !
வெளிப்படுவது ஆணவமோ அறியாமையோ மட்டுமல்ல ,
நரம்பில் குருதியில் உறைந்து போயுள்ள
ஆணாதிக்கத் திமிரும் கூட
அவர்கள் பேச்சு


சமூகத்தின் மனச்சாட்சியைக் கிளறிவிடுமோ ?
சமூகத்தின் பொதுபுத்தியை உசுப்பிவிடுமோ ?
நடக்கட்டுமே !
தயவு செய்து தடுக்க வேண்டாம் !
வெறுமே உதட்டை அசைப்பதைவிட
உடைத்துப் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது !
அனைத்தையும்
உலுக்கித் தள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது !
இப்போதே தொடங்குக !
இனியும் வேண்டாம் தாமதம் !


-
சு.பொ.அகத்தியலிங்கம்

0 comments :

Post a Comment