அடையாள சிக்கல்

Posted by அகத்தீ Labels:



அடையாள சிக்கல்

சு.பொ.அகத்தியலிங்கம்

பள்ளிச் சான்றிதழ்படி என் பெயர் கு. பரந்தாமன். வீட்டில் அழைக்கிற பெயர்
குட்டி. உறவினர் கள் எல்லோருக்கும் குட்டி என்றால்தான் தெரியும்.

தெருவிலோ என் பெயர் சர்வேயர் பிள்ளை. அப்பா சர்வேயர் வேலை செய்வதால்அப்படியா னது. ஆனால் என் ஜோடு பிள்ளைகள் மத்தியில் பச்சை. ஏனெனினில்கடும்பச்சை கலக் காத ஒரு டவுசர், சட்டை நான் போட்டு யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். என் அப்பாவுக்கு பச்சை கலர் ராசியாம். பள்ளியூனிபார்மில்கூட ஏதா வது ஒரு மூலையில் சின்னதாக பச்சை எம்பி ராய்டு செய்துவிடுவார்அம்மா. வேறு வழி? அப்பாவின் கட்டளையை மீற முடியுமா என்ன?

எப்படியோ இளமைப் பருவம் கடந்தது. ஆனாலும் என் பெயர் குழப்பமும் அடையாளக்குழப்பமும் தீர்ந்தபாடில்லை.

படித்து வேலைக்குப் போனபின் கண்டகடர் பரமு என்ற பெயர் ஒருவழியாகத்
தேறியது. கல்யாணம் முடிஞ்சது. மனைவி டீச்சர். அதுவும் உள்ளூர்
பள்ளியில், நானோ எக்ஸ்பிரஸ் பஸ் கண்டக்டர். ஊர்காரர்களுக்கு டீச்சர்
வீட்டுக்காரர் என்றானேன்.

எப்போதுமே என் முகமும் முகவரியும் சிக் கலாகவே உள்ளது. குழந்தைகள் பிறந்தபின் படிப்படியாக குமரன் அப்பா என்றும் கவிதா அப்பா என்றும் முகவரி
மாறும் போது உறுத்த லில்லை. மகிழ்ச்சிதான் ஏற்பட்டது. நான் பக்குவம்
அடைந்துவிட்டேனா? அல்லது பிரமோஷன் கிடைத்த கவுரவமா?

காலம் ஓடியது. பேரப்பிள்ளைகள் வந்து விட்டனர். சதீஷ் தாத்தா, ரம்யா
தாத்தா என்றான போது கர்வம் ஓங்கியது.சுய அடையாள இழப்பு மகிழ்ச்சியானஒன்றாகிவிட்டது.

ஆனால் இப்போது புதிய அடையாளச் சிக்கல்... அதனால்
ஏகப்பட்ட பிரச்சனைகள்.மின்சாரக் கட்டணம் கட்ட, இன்சூரன்ஸ் பிரீமியம் கட்ட, போன் பில் கட்ட,ரயில்  - பஸ் டிக்கட் எடுக்க என எதற்கும் அலைய வேண்டாம்.வீட்டிலிருந்தபடியே. கம்ப்யூட்டரில் கட்டிவிடலாம்.

அங்கேதான் சிக்கல்.ஒவ் வொன்றுக்கும் பதிவு செய்யும் ஐடியும் பாஸ் வேர்டும் ஞாபகம்வைத்துக்கொள்ளவேண் டும். அது மட்டுமல்ல மூன்று வங்கிக் கணக்கு களுக்கும்பின் நம்பர் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். எப்போதும் இந்த ஐடி, பாஸ்வேர்டு குழப்பம் என்னைப் பாடாய்ப்படுத்து கிறது.

 மாற்றிமாற்றிபோட்டு,குழப்பிசிக்கலிலமாட்டிக்கொள்வதுவாடிக்கையாகிவிட்டது.
நம் பெயரைவிட இமெயில் ஐடி, பின் நம்பர், பாஸ்வேர்டு இவைதான் இப்போது நமது மெய் யான அடையாளம் என்றாகிப்போனது. கம்ப்யூட்டருக்கு கூட பையன்பாஸ்வேர்டு செட் பண் ணித் தந்துவிட்டான். அதை வேறு ஞாபகத்தில்
வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பொடியன் வந்து கம்ப்யூட்டரை ஒப்பன் செய்ய
அடம் பிடித்தான். எல்லாம் கேம் விளையாடத்தான். பாஸ்வேர்டு
மறந்துபோச்சுன்னு ரீல் விட்டேன். உங்க பாஸ் வேர்டு கமலா என்றான். அட...
படவா உனக்கு எப்படிடா தெரிஞ்சுது என்று கேட்டேன். தாத்தா நீங்கள்ல்லாம்
ஓய்ஃப் பேரு அல்லது பேரப்பிள்ளைக பேரைத்தான் பாஸ் வேர்டா வைப்பீங்கன்னு,குட்டைப்போட்டு உடைச்சான்.

ஐய்யய்யோ நம்ம ஐடி, பாஸ்வேர்டல்லாம் ரகசியமானதாக இல்லையே என மனம் எண்ணலானது.தாத்தா இந்த வருஷம் அறுபதாம் கல்யா ணமா, என்று கேட்டான் பேரன்.உற்சாகமாக ஆமாம் வர்ற மாசம் அறுவது முடியுது என்றேன்.உங்க பேங்க் ஏடிஎம் எல்லாற்றுக்கும் 1952 பின் நம்பரா, என்றான்.
அதையும் கண்டுபிடிச்சுட்டியா, என்றேன். ஞாபகம் மறக்காமலிருக்க பிறந்த
வருஷத் தைத்தான் எல்லா இடத்திலேயும் பின் நம்பரா வச்சுக்குவாங்க, என்று
புதிரை அவிழ்த்தான்.

வேறுவழியே இல்லை ஐடி, பாஸ்வேர்டு எல் லாற்றையும் மாற்றியாகணு வேண்டும்.ஆனால் எல்லாவற்றையும் எப்படி ஞாபகத்தில் வைத்துக் கொள்வது?

முன்பு ஊரறியபெயர் இருந்தது. சிக் கல் இருந்தாலும் அதுவே முகமும் முகவரியு மாக இருந்தது. இப்போது ஐடி, பாஸ்வேர்டுன்னு ஏகப்பட்ட முகவரிகள், முகங்கள்.
அனைத்தையும் நினைவில் வைத்திருப்பதும் பாஸ்வேர்டுகளை ரகசியமாக
பாதுகாப்பதும் ரொம்ப சிரமமாக உள்ளது.

இதையே எப்படித் தீர்ப்பது என்று திணறிக் கொண்டிருக்கிறேன். அரசியலில்
ஐடண் டிட்டி கிரைசிஸ் - அதாவது  அடையாளச் சிக்கல் - என்று பேசுகிறார்களேஅது என்னவென்று விளங்கவில்லையே. போங்கப்பா நவீன உலகத் திலே ஐடி சிக்கல்இடியாப்பச் சிக்கல்தான்...

- வண்ணக்கதிர் 24.6.2012

1 comments :

  1. ssr

    ஆள் ஒருவர்; அடையாளங்களோ ஏராளம். ஒரே அடையாளம் சிறப்பு. நெஞ்சத்து நல்லம் யாம் என்ற அந்த அடையாளமே நிரந்திரம்.
    ச.சீ.இரா

Post a Comment