ஒரே பாடல்... உன்னை அழைக்கும்

Posted by அகத்தீ Labels:




ஒரே பாடல்... 
உன்னை 
அழைக்கும்.........

சு.பொ.அகத்தியலிங்கம்


“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்” -பொற்காலத் திரை இசைப்பாடலாய் இவ்வரிகளைக் கேட்கும் போதெல்லாம் மனம் உருகும். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும்,இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த வரிகளைப் பாடுவதாகக் கற்பனை செய்து பாருங்கள்...

அட, ஆபாசமாக இருக்கிறதே என முகத்தை ஏன் சுழிக்கிறீர்கள்?அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. இது ஆபாசத்திற்கு அப்பாற் பட்டதப்பா... நடப்பு எதார்த்தம் அது என்பதை உணரப்பா.. சும்மா சொல்ல வில்லை. இரண்டு செய்திகளை ஒரே நேரத் தில் சேர்த்துப்படித்தால், சில உண்மைகள் விளங்கும்.

முதல் செய்தி ஜூலை 15 ஆம் தேதி வெளியானது. கடினமான பொருளாதார சீர் திருத்தங்களை இந்தியா நிறைவேற்ற வேண்டி யது அவசியம் என்று பாரக் ஒபாமா வலியு றுத்தியுள்ளார். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியப் பொருளாதாரம், உலகப் பொரு ளாதாரம், இந்தியா-பாகிஸ்தான் உறவு உள் ளிட்ட பல்வேறு கேள்விகள் தொடர்பாக ஒபாமா விரிவான பதில் அளித்தார்.

அப்போது இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார சிக்கல் குறித்தும், வெளிநாட்டு முதலீடுகள் கட்டுப்படுத்தப்படுவது குறித்தும் பேசினார். “இந்தியா சில்லரை வர்த்தகத்தில் பல வெளிநாட்டு முதலீடுகளை தடை செய் துள்ளது. இது கவலை தரும் விஷயமாகும்.

இந்தியாவில் முதலீடு செய்வது கடினமாக இருப்பதாக அமெரிக்க வணிக நிறுவனத் தினர் எங்களிடம் தெரிவித்தனர். அதேசமயம் அந்நிய முதலீடு தொடர்ந்தால்தான் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்பு பெருகு வதுடன், பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்” என்றார்.

இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார சிக்கலுக்கான தீர்வு குறித்து கூறுகையில், “தீர்வுகளை தெரிவிப்பதற்கு இந்தியா அமெரிக்காவில் இல்லை. அவர்களின் பொருளாதார எதிர்கால வளர்ச்சி குறித்து இந்தியர்கள்தான் முடிவு செய்யவேண்டும். உலக பொருளாதாரத்தின் என்ஜினாக இந்திய தயாரிப்புகள் இருக்கின்றன.மேலும் சமீபத்திய சவால்களுக்கும் மத்தியில் இந்திய பொருளாதாரம் ஓரளவு வளர்ச்சி கண்டுள் ளது. இந்தியா எடுக்கும் பொருளாதார சீர் திருத்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உதவி தொடரும்” என்றார்.

இரண்டாவது செய்தி நமது பிரதமர் மன்மோகன்சிங் சுதந்திரதினத்தன்று செங்கோட் டையில் கொடியேற்றிவைத்து உரையாற்றி யது; தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வெற்றியை நோக்கி வேகமாக முன்னேற வேண்டும். பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வந்த நமது நாடு, இப்போது பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட முடியாத நிலையில் உள்ளது. பல்வேறு விஷ யங்களில் அரசியல் கருத்தொற்றுமை ஏற்படா ததே இதற்கு முக்கியக் காரணம்.வளர்ச்சியை எட்டுவோம்: நமது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள் எவை என்பதை சரியாக அடையாளம் கண்டுகொள்ள வேண் டிய நேரம் இது. இதில் தேசப் பாதுகாப்பும் உள்ளடங்கியுள்ளது. சர்வதேச பொருளா தாரத்தில் ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலை யும் நம்மை ஒருவகையில் பாதித்துள்ளது. ஆனால் இதே சூழ்நிலை தொடர்ந்து நீடிக் காது. சற்று சிறப்பாக செயல்படுவதன் மூலம் நாம் வளர்ச்சி இலக்கை எட்ட முடியும்.

தனித்தனியாகப் பார்த்தால் இரண்டும் தேன் தடவிய பேச்சுகள்.ராகம் தாளம் பல்லவி வேறு வேறு போல் தொனிக்கும்.இரண்டும் ஒரே பாடல்.ஒரே ராகம்.உற்றுக் கேளுங்கள் புலப்படும்.

ஐ.மு.கூட்டணி-1 ஆட்சியில் இருக்கும் போது நாடு வேகமாக நடைபோட பிரதமர் மன்மோகன் சிங் விரும்பினாலும் செய்யமுடிய வில்லை, ஏனெனில் இடதுசாரிகள் கையைப் பிடிக்கிறார்கள், கழுத்தை நெரிக்கிறார்கள் என ஊடகங்கள் ஊளையிட்டன. நடுநிலை அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் சுரண் டல் வர்க்கக் காவலர்கள் கூப்பாடு போட்டனர்.

விஷயம் என்ன? பன்னாட்டு நிறுவனங்க ளின் லாபவெறிக்காக பொதுத்துறையைக் கூறுபோடுவதை, இந்தியச் சந்தையை அவர் கள் இஷ்டம் போல் திறந்து விடுவதை, சட்டத்தையும் நெறிமுறைகளையும் அவர்கள் தேவைக்கு ஏற்ப வளைப்பதையும் இடதுசாரி கள் எதிர்த்தனர். அதனால் இடதுசாரிகள் மீது அவதூறு மழை பொழிந்தனர்.

தேர்தல் வந்தது. இடதுசாரிகள் தயவு இல்லாமல் சில மாநிலக்கட்சிகள் ஆதரவோடு ஐ.மு.கூட்டணி-2 ஆட்சி அமைந்தது. அமெ ரிக்க நலனுக்காகவே இந்தியப் பொருளா தாரத் திட்ட முடிவுகள் என மன்மோகன் அரசு அமெரிக்க எஜமான விசுவாசத்தோடு செயல்படலாயிற்று.ஆனால் ஏறும் விலைவா சியின் சுமை.உள்ளூர் தொழில்,வியாபார நசிவு...... இத்துடன் சில்லரை வர்த்தகத்திலும் அந்நியர் வர ரத்தினக் கம்பளம் விரிப்பு என வந்தபோது மாநிலக் கட்சிகள் தயங்கின. மக் களை நாளை சந்தித்தாக வேண்டுமே.
அக் கட்சிகள் யோசிக்கவேண்டிய கட்டாயம் ஏற் பட்டது. அத்துடன் தங்கள் அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலுக்காக மம்தா போன்றவர்கள் ஆடுகிற நாடகம். இவற்றால் மன்மோகன் சமா ளித்து அடுத்த அடியை எடுத்துவைக்க வேண்டிய கட்டாயம். பொறுக்குமா ஏகாதி பத்தியத்துக்கு?

மன்மோகன் செயல் வேகம் இல்லாதவர் என ஒரு அமெரிக்க ஏடு விமர்சனம் செய்தது. அதையே வேறு வார்த்தைகளில் ஒபாமா சொன்னார். “அடிமையே..எங்கள் சவுக்குக்கு நீங்கள் அடிபணியும் வேகம் போதாது. இன் னும் இன்னும் வேகமாய் சரணாகதி ஆவாய்” என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டனர்.

அவர்கள் சொல்லி ஒரு மாதம் ஆக வில்லை, எஜமான விசுவாசத்தோடு மன் மோகன் கருத்தொற்றுமை என்கிற நுட்பமான சொல்லைப் பயன்படுத்தி கூட்டணிக்கட்சி களையும் ஆதரிக்கும் கட்சிகளையும் இடது சாரிகள் தவிர்த்த மற்றவர்களையும் சரணா கதிப் பாதைக்கு வருமாறு இனிக்கப்பேசி அழைக்கிறார். கடினமான நடவடிக்கைக்கு இந்தியா தயாராக வேண்டும் என ஒபாமா கூறுவதும், கருத்தொற்றுமையோடு ஒத்து ழைக்கவேண்டும் என மன்மோகன் கூறுவதும் ஒன்றுதான்.

பெட்ரோல், டீசல் விலையை ஏற்று, சமை யல் எரிவாயு விலையை மேலும் மேலும் ஏற் றிக்கொண்டே இரு, சில்லறை வர்த்தகத்தில் அந்நியர் இஷ்டம் போல் வேட்டையாட அனுமதி, அமெரிக்க நலனுக்காக இந்திய மக்கள் நலனைக் காவுகொடு; - இவைதான் ஒபாமா கூறும் கடின நடவடிக்கை; இதற்கு எல்லோரும் ஒப்புக்கொண்டு வெண்சாமரம் வீச வரவேண்டும் என்பதைத்தான் வேறு வார்த்தைகளில் “கருத்தொற்றுமை வேண்டும்” என்கிறார் மன்மோகன்.

இப்போது கட்டுரையின் ஆரம்பத்தில் பாடிய பாடலை அசை போடுங்கள்.. இரு வரையும் கற்பனை செய்யுங்கள்.. அருவருப் பாகத் தோன்றாது. கோபம் வரும்.ஆவேசம் எழும்.

0 comments :

Post a Comment