தண்டனை ஆட்சியாளர்களுக்கா? மக்களுக்கா?

Posted by அகத்தீ

தண்டனை ஆட்சியாளர்களுக்கா? மக்களுக்கா?
சு.பொ.அகத்தியலிங்கம்

வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவர்கள் கணினி வாங்க கடைக்குப் போனால் கணினி வழங்க கடைக்காரர் மறுக்கிறார் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? ஈரானிய மாணவர் நிலை அதுதான். வங்கிக் கணக்கு தொடங் கவோ அல்லது பணப் பரிமாற்றம் செய்ய வோ ஈரானிய மாணவர்களுக்கு ஐரோப் பாவிலும் அமெரிக்காவிலும் மறுக்கப் படும்போது நாம் மவுனம் காக்க முடியுமா?ஈரான் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் முதலில் பாதிக்கப்பட்டுள் ளது அங்குள்ள மாணவர்களின் கல்வி என்பதை பல நிகழ்வுகள் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.இந்தப் பொருளாதாரத் தடையால் ஈரான் நாளொன்றுக்கு 300 கோடி டாலர் இழப்பைச் சந்திக்கிறது. இந்தப் பொருளா தாரத் தடையின் சுமையை ஆட்சியாளர் கள் யார் தலையில் ஏற்றுவார்கள்? ஈரான் அனுபவமும் அதுதான்.மக்கள்தான் இறுதியில் பலியாடாகிறார்கள்.

இது குறித்து சயீத் கமாலி டெஹான் என்பவர் ‘கார்டியன்’ ஏட்டில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் பொருளாதாரத் தடை களின் சமூகப் பாதிப்புகளை விரிவாக விவரித்திருக்கிறார்.இந்தப் பொருளாதாரத் தடை ஆட்சி யாளர்களை கிஞ்சிற்றும் பாதிக்கவில்லை; அவர்கள் தங்கள் அணு ஆயுத சோதனை யில் ஒரு மில்லி மீட்டர் கூட பின்வாங்க வில்லை. ஆனால் மக்கள் தான் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் அக்கட்டுரையில் விமர்சனம் செய்துள் ளார். அதுதான் உண்மை.

இராக்கின் மீதும் இதுபோல் பொருளா தாரத் தடை விதிக்கப்பட்டபோது சுமார் 10 லட்சம் குழந்தைகள் பாலின்றி உயிர்விட் டனர். உயிர் காக்கும் மருந்துகள் இல்லா மல் பெருமளவு மக்கள் அவதிப்பட்டனர். சதாம் உசேன் அணு ஆயுதம் வைத்திருப் பதாகக் கூறி அமெரிக்கப் படைகளை ஏவி தாக்கியதில் மருத்துவமனைகளும், கல்விக் கூடங்களும் நொறுங்கின. வழி பாட்டுத் தலங்கள் பொடியாயின. மக்கள் உயிரிழந்தனர். பெரும் இழப்புக்கு ஆளா யினர். அமெரிக்காவால் ஒரு சிவகாசி வெங்காய வெடியைக்கூட அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. சதாம் உசேனும் தூக்கிலிடப்பட்டார்.
இப்போது ஈரான் மீது பொருளாதாரத் தடை. இது மனிதநேயமற்ற செயல் அல்லவா? ஆப்கன் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டபோது அதனால் பின்லேடன் பாதிக்கப்படவில்லை.ஆப் கானியர்கள் வாழ்க்கை பெரும் நெருக் கடிக்கு ஆளானதுதான் மிச்சம்.

கியூபா மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை எனும் கொலைவாளை வீசியது. ஆனால், அங்குள்ள அரசு மக்கள் அரசாக இருப்பதால் அரசும் மக்களும் சேர்ந்தே அதனை எதிர்கொண்டனர். அங்கு குழந் தைகளுக்கு சிலேட்டு, பலப்பம், நோட் டுப் புத்தகம் போன்ற சாதாரண பொருட் களுக்குக்கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் ஆதரவாகத் திரண்டன. இந்தி யாவிலிருந்துகூட உதவிப் பொருட்கள் கப்பலில் அனுப்பப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியினரும், இடதுசாரி சிந்தனையாளர் களும் தெரிவித்த சர்வதேச ஒருமைப் பாடு, அமெரிக்கப் பொருளாதாரத் தடையை தாங்கிநிற்க கியூபாவிற்கு தார்மீக பலமானது.

ஆனால் ஈரான், இராக், ஆப்கானிஸ் தானில் ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்பதால் மக்கள் இரட்டை நுகத்தடியை சுமக்க நேரிடு கிறது. ஒன்று, ஆட்சியாளர்களின் கொடுங் கோலால் விளையும் கடும் சுமைகள். இரண்டு, பொருளாதாரத் தடையின் பெரும் சுமைகள். ஆம், உள்நாட்டு சுரண்டல் வர்க் கமும் வெளிநாட்டு சுரண்டல் கூட்டமும் அம்மக்களை சூறையாடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய வலி?

ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளதால் அங்கிருந்து பிறநாடுகள் பெட்ரோல் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்க டாலருக் கல்ல, அந்தந்த நாட்டு கரன்சிக்கே பெட் ரோலை விற்க ஈரான் முன்வந்தது. இந் தியா போன்ற நாடுகள் அந்நியச் செலா வணி சிக்கலில் இருந்து மீள இது பேருத வியாக அமையுமே? ஆனால் நடந்தது என்ன? ஈரானில் இருந்து பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைத்துக்கொண்டதற் காக இந்தியாவை அமெரிக்க வெளியு றவுத்துறைஅமைச்சர் ஹிலாரி கிளிண் டன் பாராட்டினார்.இது நமக்கு பெரு மையா? உலகுக்கு அன்பையும், சகிப்புத் தன்மையையும், சகோதரத்துவத்தையும், அமைதியையும் வாரி வழங்கும் இந்தியா என்று பெருமை பீற்றிக்கொள்வோம். ஆனால், இராக்கானாலும் ஈரான் ஆனாலும்அங்குள்ள மக்களுக்கு அதை மறுக்கும் இந்திய அரசின் பாதை சரிதானா? நியா யந்தானா?

அணுகுண்டு வேண்டாம், அணுயுத் தம் வேண்டாம். இது எல்லோருக்கும் பொருந்தவேண்டும். ஒரு நாடு செய்யலாம், ஒரு நாடு செய்யக்கூடாது என்பது அபத்தமான வாதம். தீவிரவாதிகள் கைக்கு அது போய்விடும் என்பது அரசியல் காய் நகர்த்தும் வாதமே தவிர வேறல்ல. அமெரிக்காவைவிட பெரிய தீவிரவாதி யார்? உலகில் மக்கள் மீது அணுகுண்டை வீசியது அமெரிக்கா தானே? ஹிரோ ஷிமா, நாகசாகி அதன் சாட்சி அல்லவா? வியட்நாமை அங்குலம் அங்குலமாய் நபாம் விஷவாயுக் குண்டுகளால் பாழ் படுத்தியது அமெரிக்காதானே! இவர்கள் ஈரானில் அணு அயுதம் தயாரிப்பதாகக் கூறி பொருளாதாரத் தடை விதிப்பது ஏற்கத்தக்கதா, இல்லவே இல்லை.

எந்த நாட்டுக்கு எதிராக இருப்பினும், ஆட்சியாளர்களின் கொள்கைகளோடு மோதுவதற்கு மக்களைத் தண்டிக்கும் பொருளாதாரத் தடை எனும் ஆயுதத்தை கையிலெடுப்பதை மனிதகுலம் இனியும் அனுமதிக்கலாமா? கூடாது! கூடாது! ஈரான், இராக், ஆப்கானிஸ்தான், கியூபா என எங்கும் சரித்திரம் சுட்டும் உண்மை இதுதான்.

0 comments :

Post a Comment