ஓசோன் படலத்தில் மட்டுமா ஓட்டை?

Posted by அகத்தீ Labels:



 http://volunteerinternational.files.wordpress.com/2012/07/rio-20-logo-2.jpeg
ரியோ + 20 மாநாடு - 
ஓசோன் படலத்தில் மட்டுமா ஓட்டை?
சு.பொ.அகத்தியலிங்கம்


“உங்கள் தத்துவக் கண்ணோட்டம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இனியும் இயற்கையைச் சூறையாடுவதை சகித்துக் கொள்ள முடியாது”-இப்படித்தான் உலகைக் காக்க விரும்பும் சுற்றுச்சூழலியலாளர்களும் முற்போக்காளர் களும் முழங்குகின்றனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ரியோவில் ஜார்ஜ் புஷ், காஸ்ட்ரோ உட்பட உலகத் தலைவர்கள் கூடி, புவிச் சமநிலை யையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க பிர கடனம் வெளியிட்டனர். சற்று நம்பிக்கை அளித்தது. அந்த உச்சி மாநாட்டில் பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையானது பிரகடனத்தைவிட வலுவாய், உலக மனசாட்சியை நோக்கி கேள்வி எழுப்பியது?

சுற்றுச்சூழல் பெருமளவு சீர்கெடுவதற்கும், புவிவெப்பமயமாவதற்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்கும் யார் காரணம்? உலகில் மொத்த நுகர்வில் பெரும்பகுதி மேற்கத்திய வளர்நாடுகளுடையது அல்லவா? அவர்களின் நுகர்வுவெறிக் கலாச்சாரம்தானே இந்த இயற்கைச் சமநிலை குலைவுக்கு பெரும் காரணம்! எனவே அதைச் சீர்செய்ய பெரும்பங்கு செலுத்த வேண்டியவர்கள் அவர்களே! நிதி ஒதுக்க வேண்டியது அவர் கள் பொறுப்பே!இத்தகைய கருத்துக்களை தனது தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் காஸ்ட்ரோ உலகின் மனசாட்சியில் விதைத்தார்.

ஆனால் மனசாட்சியை லாபவெறிக்கு பலியிட்டு விட்ட வல்லரசுகள் மற்றும் சுரண்டும் கூட்டத்தின் நெஞ்சில் மட்டும் அந்த பசுமை விதை முளைக்கவே இல்லை. ஏனெனில் அந்த முதலாளித்துவ ஜென்மங்களின் நெஞ்சில் ஈரமே இல்லை. 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஜோகன்னஸ்பர்க்கில் கூடிய உச்சிமாநாட்டின் முடிவுகள் அதைத்தான் பிரகடனப்படுத்துகின்றன

.உலகிலுள்ள பெரும் நகரங்கள் கூட்டாக இயற்கை வளங்களில் 75 விழுக்காட்டை நுகர் கின்றன. 50 விழுக்காடு குப்பைகளை வெளி யேற்றுகின்றன. 70 விழுக்காடு பசுமை வாயுவை உமிழ்கின்றன. இந்த நுகர்வுவெறி குறைவதற்கான அறிகுறியே காணோம். இதற்கு கடிவாளம் போடும் எந்த முயற்சியும் வெற்றிபெறவே இல்லை.உலகில் 30 விழுக்காடு பல்லுயிர்கள் அழிவதற்கு சர்வதேச நுகர்வுச் சங்கிலியே காரணம் என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. உலக மக்களின் நுகர்வுக் கலாச்சாரம் இப் படியே போனால் என்ன ஆகும்?

இருபது ஆண்டுகளுக்கு பிறகு மக்கள்தொகை மேலும் 200 கோடி அதிகரித்திருக்கும்; நகர்மயமாதல் இரட்டிப்பாயிருக்கும்; விளை நிலங்கள் மிக மிக குறைந்திருக்கும்; கடல்வளம் வற்றியி ருக்கும்; இயற்கை வளங்கள் வற்றி வறண்டு மலட்டுத்தன்மை நோக்கி நகரத் தொடங்கி யிருக்கும் என இயற்கையை - உலகை நேசிப்போர் பதறுகின்றனர். ஆனால் ஜோகன் னஸ்பர்க் மாநாடு இப்பிரச்சனைகள் குறித்து ஆக்கப்பூர்வமான எந்தச் செயல்திட்டமும் இன்றி கூடிக் கலைந்திருக்கிறது. வெற்றுப் பிர கடனத்தைத் தவிர வேறெதுவும் விளையவில்லை.

‘மக்கள் தொகை அணுகுண்டு’ என ஒரு புத்தகம் எழுதி அறுபதுகளில் பெரும் பரபரப்பு ஊட்டியவர் பவுன் ஆர் எரிச்.அவரது மிகைப்படுத்தப்பட்ட அனுமானங்கள் பொய் யாகி இருக்கலாம்; அதன் காரணமாக அவர் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கலாம்; ஆயினும் அவர் கடும் வார்த்தைகளில் எச்சரித்த உணர்வுகள், இன்றும் பொருத்தவே செய்கின்றன.

அவர் இன்றைய சூழல் குறித்த ஒரு பேட்டியில், எதிர்காலம் ஆறு விதமான பேரழிவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறார்.ஒன்று, பருவநிலை மாற்றம் விவசாயத்தைச் சீரழிக்கும்; கொள்ளை நோய்களைப் பரப்பும்.இரண்டு, கடல்நீர்மட்டம் உயர்வதால் நாடு நகரங்களுக்குள் புகுந்து, உலகெங்கும் பெரு மளவு மக்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாவர். மூன்று, நச்சு வேதியியல் கழிவுகளால் வடதுருவம் முதல் தென் துருவம் வரை என் னென்ன விளைவுகள் ஏற்படுமென்று இன் னும் ஊகிக்க முடியவில்லை; அதைக் கட் டுப்படுத்த திட்டமும் இல்லை; ஏழு வயதி லேயே புற்றுநோய்க்கு ஆளாகும் அபாயம் நேரி டலாம்.நான்கு, பல்லுயிர்கள் வேகமாக அழிக்கப் படுவதால் சுற்றுச்சூழலும் புவிச் சமநிலையும் பாதிக்கப்படும். இதன் விளைவுகள் கடுமை யாக இருக்கும்.ஐந்து, நெடுங்காலமாய் கட்டுப்படுத்தி வைத்திருந்த தொற்றுநோய்கள் மீண்டும் விஸ்வரூபமெடுத்து உலகை மிரட்டலாம். ஆறு, உலகில் சகிப்புத்தன்மை அற்றுப் போய் அணுயுத்தம் மூளலாம். அது உலகையே இதுவரை பூமிக்கோளம் அறியாப் பேரழிவு களைக் கொண்டு வரலாம்.இவ்வாறு அவர் எச்சரிப்பது மிகை அல்ல.

காத்திருக்கும் ஆபத்தே.அதுமட்டுமா, தண்ணீர் பற்றாக்குறை உலகை புரட்டிப் போடலாம். தண்ணீருக் காகத்தான் இனி மூன்றாம் உலகப்போர் நடக் கலாம் என்று கூட கூறப்படுகிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதால் - புவிவெப் பமாவதால் - ஏற்படும் விளைவுகளை கற்பனை செய்தாலே வயிற்றைக் கலக்குகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்கவும் வழியில்லாமல் போகலாம். “இனி, காசு உள்ளவருக்கு மட்டுமே காற்றும் தண்ணீரும்” என்பது சுரண்டும் கூட்டத்தின் நெறிமுறை ஆகலாம்.இந்த புவியைக் காப்பாற்ற வேண்டாமா? முயன்றால் முடியும்.

ஜோகன்னஸ்பர்க் நகரம் குப்பைகளையும் கழிவுகளையும் மறுசுழற்சி செய்வதன் மூலம் வெறுமே மூன்று விழுக்காடு கழிவையே நிலத்தில் கொட்டி உலகிற்கு வழி காட்டுகிறது. உகாண்டா நாடு கழிவுநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த வழிகண்டு, வழி காட்டுகிறது. மால்டா மின் உபயோகத்தை கட் டுப்படுத்த மாதிரி அமைக்கிறது.பெய்ஜிங் நகரில் இன்னும் சைக்கிள் பெரு மளவு உபயோகிக்கப்படுவதும்; அதற்கென சாலைத்திட்டமிடலில் பாதை அமைப்பதும் தொடர்கிறது.

இந்தியாவோ கண்ணை மூடிக்கொண்டு, பன்னாட்டு ஆட்டோமொபைல் முதலாளி களின் வலையில் சிக்கிக் கொண்டுவிட்டது. நகரங்களில் சைக்கிள்கள் ஓரங்கட்டப்பட்டு பெருமளவு மோட்டர் சைக்கிளும் கார்களும் ஆக்கிரமிக்கின்றன.பெட்ரோல் புகை காற்றை மாசுபடுத்துகிறது. அதீதமான பெட்ரோல் பயன்பாடு இயற்கையை கண்மூடி உறிஞ்சச் செய்கிறது. சாலையின் தன்மைக்கும் அளவுக்கும் சம்பந்தமே இல்லாமல் பெருகும் இந்த மோட்டார் வாகனங்கள் விபத்துகளில் மனித உயிர்களை ஏகமாக பலிவாங்குகிறது. ஆயி னும் உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங் களின் சொல்படி நாட்டுப் பொருளாதாரத் தையும் இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழ லையும் ஒருசேர அழிக்கும் பாதையில்தான் இந்தியப் பொருளாதாரமும் திட்டமிடலும் விரைகிறது.

“நவீனத் தொழிற்துறையும் விவசாயமும் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை மீண்டும் அரங்கத்துக்கு கொண்டு வருகின்றது” என மாமேதை மார்க்ஸ் சித் தரித்தது மெய்யாகிவிட்டது.“உற்பத்தி நிகழ்முறைகள் புதிரானதாக இருந்த பழைய காலத்துக்கு மீண்டும் திரும்ப முடியாது” என்பதையும்; “விஞ்ஞானம், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது” என்பதையும் மார்க்ஸ் கூறினார்.

தற்போது எழுந்துள்ள சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து டேவிட் ஹார்ஷி என்கிற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் - (காரல்மார்க்ஸின் மூலதனத்துக்கு வழிகாட்டி எனும் நூலை எழுதியவர் கூறிய கருத்துக் களை நெடிய மேற்கோளாக கீழே தருவது தவிர்க்க முடியாதது.)

“சில மார்க்சிஸ்டுகள் - குறிப்பாக ‘முத லாளித்துவம் - இயற்கை - சோசலிசம்’ என்ற தலைப்பில் ஒரு இதழை நிறுவியுள்ள ஜிம் ஓ கோன்னோர் என்பவர் தலைமையிலான மார்க்சிஸ்டுகள், இயற்கையில் காணப்படும் தடைகளை இரண்டாவது முரண்பாடாகக் குறிப்பிடுகின்றனர். மூலதனம் - தொழிலாளர் உறவே முதல் முரண்பாடு. இந்த இரண்டாவது முரண்பாடு தொழிலாளர் பிரச்சனையைப் போலவே அதே அளவு அரசியல் கவனத்தை (அதைவிடக் கூடுதலான அளவில் இல்லாவி ட்டாலும்) ஈர்க்கிறது என்பது உண்மையே. முத லாளித்துவம் மேலும் வளர்ச்சி அடைய சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத விதத்தில் - கச்சாப் பொருட் களையும் மூல ஆதாரங்களையும், நிலத் தையும் வழங்கும் விதத்தில் இயற்கை இருக்க வேண்டும். அத்துடன் கழிவுகளை இழுத்துக் கொள்ளும் தொட்டியாகவும் அது விளங்க வேண்டும். இந்த விதத்தில் இயற்கையு டனான உறவில் நெருக்கடி ஏற்படுத்தல் என்ற கருத்துக் குறித்து கவலை, அரசியல் ஆர்வம் மற்றும் முயற்சிக்கான விரிவான தளம் இருக்கிறது என்பது உறுதி. 1970களில் தொழிலாளர் இயக் கங்களும் சோஷலிச இயக்கங்களும் தோல் வியடைந்த பிறகு முதல் முரண்பாட்டின் இடத்தில் - முதலா ளித்துவ எதிர்ப்பு இயக்கத் தின் முக்கிய அம் சமாக - முதலாளித்துவத் தின் இரண்டாவது முரண்பாடு முன்னுக்கு வருகிறது என்ற கருத்தை ஜிம்.ஓ.கோன் னோர் தெரிவித் துள்ளார். இந்த வித அரசியலை எவ்வளவு தூரத்துக்குத் தொடர வேண்டும் என்பது குறித்து முடிவு செய்வதை உங்க ளிடமே விட்டுவிடுகிறேன்.

‘மூலதனம்’ முதல் தொகுதியில் மார்க்ஸ் அளித்துள்ள வரைபடத் தைக் கருத்தில் கொண்டோ மெனில், இயற் கையுடன் உறவு குறித்த பிரச் சனையை மிகச் சிறியதாகவோ எளிதான தாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தெளிவு. நம் முடைய காலங்களில் இயற்கை யுடனான உறவில் உள்ள தடைகள் பெரிய அள வில் அச்சமூட்டும் வகையில் நம்மைச் சூழ்ந்து வருகின்றன. இயற்கையுடனான நமது உறவில் நெருக்கடிகள் நம்மை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்பது தெளிவு.”

அவர் கூறியது மெய்யே! முதலாளித்துவச் சுரண்டல் வெறியால் ஓசோன் படலம் மட்டும் ஓட்டை விழவில்லை. ஒட்டுமொத்த பூமிக் கோளமும் நெருக்கடியை நோக்கி மரண வேகத்தில் நகர்கிறது. முதலாளித்துவ அமைப்பே ஓட்டையாகிவிட்டது. பொருளா தார நெருக்கடி தீவிரமடைவதும்; இருப்போ ருக்கும் இல்லாதோருக்குமான இடைவெளி பன்மடங்கு பெருகுவதும்; சுற்றுச்சூழலும் புவிச் சமநிலையும் சீர்கெடுவது ஒன்றோடொன்று இணைந்தது. இதற்கு எதிரான போராட்டமும் பன்முகத்தன்மை கொண்டதாகவே இருக்க முடியும்.










0 comments :

Post a Comment