Posted by அகத்தீ Labels:

 

நடு நிசியில்

நாய்களுக்கு

குரைப்பதில்

போட்டி வைத்தவர்கள்

யார் ?

 

இந்த நள்ளிரவில்

காற்று

சீழ்க்கை அடித்து

கூப்பிடுவது

யாரை ?

 

இந்த நடு இரவிலும்

பேச்சுச் சத்தம்

கேட்கிறதே

என்னைப்போல்

தூக்கம் வராதவர்களோ ?

 

இருட்டு என்பது

குறைந்த வெளிச்சம்

என்பதுபோல

நிசப்தம் என்பதும்

குறைந்த சப்தம்தானே !

 

சுபொஅ.

24/11/2023.


0 comments :

Post a Comment