அவர்களை ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?

Posted by அகத்தீ Labels:





அவர்களை  ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?



அவர்களை
ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?
அவர்களுக்கு
இடிப்பதற்குத்தானே பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது .


கரசேவை எனும் திவ்ய நாமம் வேறு அதற்கு
இடிப்பதும் அழிப்பதுமே அவர்களின் திருப்பணி
யாக குண்டத்தில்கூட அனைத்தையும்
எரிக்கவும் பாழாக்கவும்தானே செய்கின்றனர்
அதுவும் ஊரான் வீட்டு நெய்யில்….


அதிகாரத்தை அவர்களிடம் கொடுத்தால்
அவர்கள் தெரிந்ததைத்தானே செய்வார்கள்
நிதித்துறை ,நீதித்துறை ,கல்வித்துறை
வேளாண்மை , தொழில் ,இன்னபிறவற்றை
எதையும் இடித்து நொறுக்கவே
அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்


ஆக்கும் கடவுள் பிரம்மனுக்கே கோயில் இல்லை
உழைப்பாளி உனக்கா மரியாதை தருவார் ?
அவர்களை
ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?
அவர்களுக்கு
இடிப்பதற்குத்தானே பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது .


 பழைய இந்தியாவை நொறுக்குவது
புதிய இந்தியாவைக் கட்டவா ? இல்லை .
நீ அப்படி நம்பினால் மூடன்


விபத்து நடக்கும் போது
பேரழிவின் போது
உதவுவதற்கு சிலர் ஓடோடி வருவர்
எரிகிற வீட்டில் புடுங்கினது ஆதாயம் என
கொள்ளையடிக்க களமிறங்கும் ஒரு கூட்டம்
துணை இருக்கும் காவல் துறை ,அதிகாரம்
அனுபவத்தில் பார்த்ததில்லையா ?


பேரழிவின் விழிம்பில் தேசம் திணறுகிறது
அம்பானி ,அதானி தேசத்தை சூறையாட
மோடிஷா அதிகாரம் வெண்சாமரம் வீசுகிறது
அவர்களை
ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?
அவர்களுக்கு
இடிப்பதற்குத்தானே பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது .


சுபொஅ.
  

0 comments :

Post a Comment