‘சுபம் லாபம்’

Posted by அகத்தீ Labels:




சுபம் லாபம்’

சந்நியாசியோ
சந்நியாசினியோ
சாபம் கொடுத்தால்
எதிரிகள்  
எரிந்து பஸ்பமாகி விடுவார்களே!
பின் எதற்கு சட்டங்கள்
அரசு இயந்திரங்கள் ?


சத்ரு சம்ஹார யாகம்
செய்வித்தால்
எதிரிகள்
அழிந்தே போய்விவிடுவார்களே!
அப்புறம் ஏன்
ராணுவம்
போர்த்தளவாடங்கள்
பெரும் செலவு ?

தியானம் செய்தாலே
எல்லாம் சித்திக்குமே !
அப்புறம் ஏன்
ஹெலிகாப்டரில்
பறந்து பறந்து பிரச்சாரம் ?

தர்மம் தலை காக்குமாம்
ஊருக்கே சோறுபோட்ட
விவசாயி
தூக்கில் தொங்குவது ஏன் ?
கேள்வி கேட்காதே !
நீ
இந்து விரோதி ஆகாதே !
ஆண்டி இண்டியன் ஆகாதே !

சாபம் கொடு!
சத்ரு சம்ஹார யாகம் செய் !
தியானம் செய் !
கார்ப்பரேட்டுகளும்
கார்ப்பரேட் சாமியார்களும்
கார்ப்பரேட் சவுக்கிதார்களும்
மேலே மேலே ஏற
குனிந்து
படிக்கட்டாகு !
 சுபம் லாபம்’
அவர்களுக்கும் !

சுபொஅ.

0 comments :

Post a Comment