தலைப்பு எதற்கு ?

Posted by அகத்தீ Labels:

தலைப்பு எதற்கு ?

==========================

நேற்றுவரை நம்பியவற்றை
சற்றே நகர்த்திவை !

அடையாளங்கள் ஒன்றுவிடாமல்
துறந்து அம்மணமாகு !

இந்த நொடிவரை எதிர்பார்த்தவற்றை
இடம்பெயரச் செய் !

கீழிருந்து மேலே பார் !
மேலிருந்து கீழே பார் !

இடம் வலம் முன்பின்
எங்கும் துழாவு !

காலடியை தவறவிடு !
கைககளை சுழலவிடு !

பூமியில் உருளு ! நீரில் மித !
நெருப்பின் சுவை அறி !

நிபந்தனை இல்லாமல் ஊர்சுற்று !
அனைத்தையும் வாசித்தறி !

எதையும் சாராமல் ! எதன்மீதும் சாயாமல் !
ஞானத்தை தேடி அலை !

ஒருவேளை அகப்படலாம் !
உன்னுள்ளும் புத்தன் இருக்கலாம் !

- சு.பொ.அகத்தியலிங்கம் .

0 comments :

Post a Comment