முதுமை அவர்களுக்கல்ல

Posted by அகத்தீ Labels:




முதுமை அவர்களுக்கல்ல

- சு.பொ.அகத்தியலிங்கம்.


தோலில் முதுமையின் வடுக்கள் , உடம்பில் தளர்ச்சி , ஆனால் வார்த்தை களில் தெளிவு ; ஏற்றுக்கொண்ட பாதை யில் சறுக்கலின்றி இந்த நிமிடம் வரை சலிப்பில்லாப் பயணம்; இதுதான் அவர் களை நோக்கி நம்மை பொறாமை யோடு பார்க்கவைக்கிறது.
" உலக அளவில் முக்கியமான ஒரு புத்தகத்தை தமிழ்ல முழுமையா , விரிவா கொண்டுவந்துட்டோம்கிற மன நிறைவு ஒருபக்கம் இருந்தாலும் , நாம வெளியிலேர்ந்து கொண்டுவந்து சேர்க்க வேண்டிய படைப்புகள் இன்னும் கடல ளவு இருக்கேங்கிற கடமையும் நாம இருக்குற உடல்நிலை எதுவரைக்கும் அனுமதிக்கும்கிற உண்மையும் ஏக்கத்தைத்தான் உருவாக்குது ”இதைச் சொல்லுகிறவர் இளைஞரோ நடுத்தர வயதுக்காரரோ அல்ல; அகவை எண்பதைக் கடந்துவிட்டவர். ஒரு நூலுக் குச் சொந்தக்காரர் அல்ல; தமிழ் அறி வுத்தளத்தில் பல காத்திரமான படைப் புகளைத் தந்த ஆளுமை .பெரியார், சுயமரியாதை இயக்கம் , சாதி எதிர்ப்பு , மார்க்சியம் , மனித உரிமை என இவர் பதித்த தடம் அதிகம் .அவர்தான் எஸ்.வி. ராஜதுரை .

ஏற்ற இறக்கங்களை கம்யூ னிஸ்ட் இயக்கம் சந்தித்த போதும் அதன் மீது மாளாக் காதலுடன் இருக்கும் இந்த கிழவர் ‘ சோஷலிச மீசை இன்னும் கறுக் கும்’ என்கிற கவித்துவ வரிகளை நினை வூட்டுகிறார்.கம்யூனிஸ்ட் அறிக்கையை புதிதாக பிழையற மொழியாக்கம் செய்ததுடன் அது குறித்த விளக்கங்களுடன். இப் போது அவர் தமிழ் அறிவுலகிற்குத் தந்தி ருக்கும் கொடை போற்றுதலுக்குரியது . இப்படைப்பு குறித்து அவர் மனநிறை வடைகிற நேரத்திலேயே இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறதே உடல் ஒத்துழைக்க மறுக்கிறதே என முதுமை யிலும் கவலைகொள்வது குன்றா சமூக அக்கறையின் பெரும் சாட்சி அன்றோ ! இவரிடம் கனிந்து நிற்கும் உழைப்பை , தேடலை , சமூகப் பொறுப்பை இளைஞர் கள் வணக்கம் செய்தால் மட்டும் போதாது வரித்துக் கொள்ளவும் வேண்டும்.

நான் செத்த பிறகு சடங்குகள், சம்பிரதாயங்கள், மேளம் ,வெடி , மாலை மரியாதை எதுவும் செய்ய வேண்டாம் ; படத்திறப்புகள்கூட வேண் டாம் ; எரித்து விடுங்கள் என 92 வயது கி.ராஜநாராயணன் குமுதத்தில் வேண்டு கோள் விடுத்ததைப் படித்த போது ; 20 வயதுகளில் இடைச்செவல் கிராமத்தில் ஆயுதப்புரட்சிக்கு பதியம் போட்ட இளைஞனின் கம்பீரம் சற்றும் குறையாமல் இருப்பதைக் காண முடிகிறது .பள்ளிப்படிப்பையே தாண்டாத அவர் புதுவைப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராய் உயர்ந்தது எப்படி ; வாசிப்பு என ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம் .

புத்தக வாசிப்பு மட்டு மல்ல மனிதர்களை வாசித்ததும், கிராம வாழ்க்கையை ரத்தமும் சதையுமாய் வாசித்ததும் தான்.கோபல்ல கிராமமும் , வேட்டியும் , நாட்டுப்புற கதைகளும் , கரிசல் காட்டு இலக்கியமும் காலந்தோறும் கி.ரா பேரை சொல்லி நிற்கும் .அவரது எழுத் தில் வீசும் கரிசல் காட்டு மனிதர்களின் வாசம் ஒருபோதும் நம்மை விட்டு அக லாது . அவரைப் பின் தொடரும் கரிசல் காட்டு படைப்பாளி படையொன்று உண்டு.வாழ்வின் இறுதி அழைப்பை எதிர்பார்க்கும் நேரத்திலும் அவரது வாசிப்பு வேட்கையும் எழுத்து வேட் கையும் நமது சோம்பேறித்தனத்தின் மீது சவுக்காய் விழுகிறதே ! இளையதலை முறை வெறியோடு பின்பற்ற அவரிடம் நிறைய நிறைய இருக்கிறது .
“ எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் இருப்பது நல்லது .அந்த வேர்கள் அறுந்து போய்விட்டது . இப்போது புதிதாக வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது . சில சமயம் வேர் பிடித்துக் கொள்கிறது. சில சமயம் பிடிக்கிறது இல்லை.” என்கிறார் 83 வய தான அசோகமித்திரன்.
“நாலு வரு ஷத்திற்கு முன்பே இறுந்து விடுவேன் என நினைத்த அவருக்கு இப்போது தமிழக அரசு விருது கொடுத்து கவுரவித் திருக்கிறது . விருதை வாங்க 20 படிக்கட் டுகள் ஏறவேண்டுமா என்பது இவரது தற்போதைய கவலை.கணையாழி இதழின் ஆசிரியராக இருந்தவர். அப்பாவின் சிநேகிதர், 18வது அட்சக்கோடு போன்ற பல படைப்புகளின் சொந்தக்காரர். நாவல் ,சிறுகதை இரண்டிலும் முத்திரை பதித்தவர்.

கவிதை குறித்து சந்தேகப் பார்வை கொண்டவர் . தண்ணீர் தண்ணீர் என கோமல் சாமிநாதன் அரசியலும் சமூக மும் கலந்து தயாரித்த நாடகமும் சினி மாவும் சக்கைப் போடு போட்ட காலத்தில் இவர் தனிமனித பாலியல் வாழ்வோடு பிசைந்து எழுதிய தண்ணீர் எதிர்திசையி லான பயணமாகும் . இவரது இலக்கியக் கோட்பாட்டில் மாறுபட்டவரும் இவரது எழுத்தை விரும்பி ரசிப்பார்கள் .“படைப்புக்கு எடிட்டர் ரொம்ப அவசியம்” என இன்றும் கூறும் இவர் ; தயங்காமல் மாற்று கருத்துகளை இப் போதும் முன்வைக்கிறார் .பரந்த கூர்மை யான வாசிப்பும் எழுத்தும் இந்த நொடி வரை ஜீவத்துடிப்போடு இவரை வைத்தி ருக்கிறது . “ உடம்பு முடியுதோ இல் லையோ ஒரு நாளைக்குக் குறைஞ்சது மூணு மணி நேரம் படிச்சுடுவேன். வாசிப்பு என்னை வேற உலகத்துக்கு கொண்டுபோயிடும்” அந்த முயற்சியும் உழைப்பும் படைப்பு வரம் வேண்டி நிற்கும் புதிய தலைமுறை கறாராகப் பின்பற்ற வேண்டியவை அல்லவா ?

உடற்கூறியலில் செல்லின் வளர் சிதை மாற்றம் வயதாக வயதாக எதிர் திசையில் நகரும்.ஆனால் மரணம் அணைக்கிற வரை தன்னைப் புதுப்பித் துக் கொண்டே இருப்பவன் தான் படைப் பாளி. மேலே சந்தித்த மூவரும் தாங்கள் படைப்பாளி என்கிற கவுரவத்தை உயர்த்திக் காண்பிக்கிறார்கள்..அதற்கு அவர்கள் நல்ல வாசகர்களென்பதும் ; இடைவிடா தேடலில் உழல்பவர்க ளென்பதும் முக்கியம் . இதைவிடவா அவர்கள் வாழ்க்கை பெரிய செய்தி சொல்ல வேண்டும் ?

1 comments :

  1. இராஜராஜேஸ்வரி

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_8.html

Post a Comment