அசைபோட விவாதிக்க

Posted by அகத்தீ Labels:

அசைபோட... விவாதிக்க...
சு.பொ. அகத்தியலிங்கம்

எல்லாமாகிய எழுத்து ,ஆசிரியர் : சா . கந்தசாமி ,வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7 , இளங்கோ தெரு , தேனாம்பேட்டை ,சென்னை - 600 018 .பக் : 144 , விலை : ரூ . 90
பேச்சு, எழுத்து, மொழி, படைப்பு, இலக்கியம், வாசகன், விருது, பாராட்டு, விமர்சனம், பிழை, சரி, எடிட்டர், சினிமா, உலக இலக்கியம் என எல் லாமாகிய எழுத்தே இந்நூல். “கட்டுரை என்பது ஆராய்ச்சி சார்ந்து - எடுத்துக்காட்டுகள் கொண்டதில்லை. படைப்பு போலவே சுதந்திரமான மனநிலையில் எழுதப் பட்டவை .எனவே படைப்புத்தன்மை கொண்டிருக்கிறது ” என முன்னுரையில் சா.க சொல்லியிருப்பது இந்நூ லைப் பொறுத்தவரை நிஜமே . புத்தகம் பேசுது இதழில் வெளிவந்த 18 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். “சர்ச்சையைக் கிளப்பாதது பேச்சோ ; எழுத்தோ கிடையாது . ஏனெனில் எழுதப்பட்டது எல்லாம் உண்மையானதோ சர்ச்சைக்கு அப் பாற்பட்டதோ கிடையாது ”- இந்த சா.க வின் வாக்குமூலம் இந்நூலுக்கும் பொருந்துமே !அசல் எழுத்து, அசல் இலக்கியம், அசல் படைப்பு என இந்நூல் நெடுக சா.க பேசுகிறார். எது அசல்? எது போலி? எது நகல் ? இதற்கான இலக்கணம் எதையும்கறாராக வரைய வில்லை .
வரையவும் முடியாது . கான மயில் , வான் கோழி இரண்டும் தோகை விரிப்பது ஒன்றை நகலெ டுத்து ஒன்றல்ல ; இரண்டும் அதனதன் இயல்பில் அசலாகவே செய்கின் றன . ஆனால் ஒப்பீடு செய்த படைப்பு மனம் கற்பித்தது உண்மையாகிவிடுமோ ! ஆக அசல் என வகைப்படுத்தல் தெளிவானதாக அமை யுமோ?.சில சொற்களும் சில செய்தியும் திரும்பத் திரும்ப வருகிறது ; வெவ் வேறு மாதங்களில் படிக்கும் போது சலிப்பில்லாமல் இருக்கலாம் , ஆனால் புத்த கமான பின் நெருடத்தான் செய்கிறது . ‘மரணமில்லா மனிதன் கட்டுரையில்’ ஜூலியஸ்பூசிக் மனைவி அகுஸ்தினா குறித்து முதலிலும் கடைசியிலும் கூறியது கூறல் ஏன் ? அக்காட்டன் மொழியில் எழு தப்பட்ட கில்காமெஷ் காவியம் பற்றிய குறிப்பு பல இடங்களில் ஏன் ? பேச்சின் வண்மை குறித்தும்,எழுத்தின் இயல்பு குறித்தும் சொன்னதும் சொல்லாமல் விட்டது குறித்தும் நூலில் திரும் பத்திரும்ப பேசப்படுகிறது.அசலான இலக்கியத்திற்கு மொழி கிடையாதென்கிறார் ; பண்டைய நாற் பத்தியோரு நூல்கள் மட்டுமா செம்மொழி எனக்கேள்வி எழுப்பி நவீன படைப் பிலக்கியத்திற்கு செம்மொழியில் உரிய இடம் வேண்டுமென்கிறார்; டால்ஸ் டாய் எழுத்தில் காந்தி கொண்ட பற்றுறுதியையும் லெனினுக்கு ஜாஜ்லண்டனின் உயிராசை மீதான காதலையும் அழுத்தம் திருத்தமாய் நினைவுகூர்கிறார்;
இருநூறு பக்கங்களில் சொல்ல முடியாத எதையும் இரண்டாயிரம் பக்கங்களில் சொல்லி முடித்துவிடமுடியாது என க.நா.சு கூறியதை வழிமொழிகிறார் ; உலகத் திலுள்ள கடினமான வேலைகளில் முதலாவது என்றால் படிப்பதுதான் என்கிறார்; நல்ல புத்தகம் கெட்ட புத்தகம் பேசிய சினிமா மௌன சினிமா பற்றியும் எழுது கிறார் ; கற்றது என்பது ‘ இன்னும் கற்க வேண்டியிருக்கிறது ’என்பதுதான் என முடி வாகக் கூறுகிறார் .ஆக இந்நூலில் அசைபோட சிலபல செய்திகள் உண்டு என்பது போல் விவாதிக்கவும் நிராகரிக்கவும் சில செய்திகளும் உண்டு .எந்த நூலுக்கும் எடிட்டர் தேவை இல்லை என்பது சா.க அபிப்பிராயம் ; ஆனால் எடிட்டர் தேவை என்பதே இன்றைய யதார்த்தம். “படைப்பிற்கு படிப்பு விரோதம் என்று சொல் லப்படுகிறது. எழுத்து ஞானத்தால் எழுதப்படுகிறது ”என்பது சா.கவின் கட்சி; ஆனால் ஞானம் பெறவே தொடர் வாசிப்பு அவசியமன்றோ ! படிப்பு படைப்புக்கு வலுசேர்க்குமே ! உலக ஞானத்தை அள்ளிவர படிப்புதேவையே ! ஆங்கில அறிவை போதுமான அளவு வளர்க்கத் தவறியதற்கான தண்டனையை இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பவன் நான். இப்படி சொல்லவும் இதில் நிறைய உண்டு. இலக்கியமும் சர்ச்சையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தை கள். இந்நூல் மட்டும் விதிவிலக்காக எப்படி இருக்க முடியும்? படியுங்கள். உரையாடுங்கள்.

0 comments :

Post a Comment