விதேசி உபதேசம்

Posted by அகத்தீ Labels:



விதேசி உபதேசம்
 


தலைதெறிக்கும் அவசரத்தில்
தடுமாறும் அரசே!
விலைபேசி ஒவ்வொன்றாய்
கூறுகட்டி விற்பது ஏன்?

ஏனிந்த கஞ்சத்தனம்?
ஆமைவேகம் ஆகாது
விஸ்வரூபமெடு!

மொத்தமாய் விலைபேசி
நாட்டையே விற்றுவிடு!
பதவி பறி போகாது
ஆட்சிக்கு இப்போது
ஆபத்து கிடையாது..

கங்காணிகள்  துணைஇருக்கு!
ஊழல் வழக்குகளும்
மத்திய புலனாய்வும்
கைவாளாய் இருக்கும் வரை
கவலையில்லை..துணிந்து நில்!

ஒப்புக்கு கண்டனங்கள்
சுரத்தில்லா போர்முழக்கம்
ஊரெங்கும் நடக்கட்டும்
கண்டுகொள்ளாதே விட்டுவிடு!

என்ரான் அனுபம் மறவாதே
கரசேவகர்கள் ஆட்சியிலும்
விதேசிசேவை வெகுஜோராய்
நடக்குமே..நாடறியும் இதை..

எதற்கும்.. எச்சரிக்கை..
இடதுசாரிகள் மீது
ஒரு கண் வை..
புதைக்கப்பட்ட
பகத்சிங்குகளுக்கு
புத்துயிரூட்டிவிடப்போகிறார்கள்!!!

- சு.பொ.அகத்தியலிங்கம்






3 comments :

  1. Unknown

    இறுதிவரிகளில் துவங்குகிறது நமது பாதை!

  1. வடிவேல் கன்னியப்பன்

    அருமை!

  1. ஞானகுரு.ந

    Lefts are fighting for the day to day iissues,they should com forward to win over the minds of the people for an alternate.with out this people can't' rally behind them.they should sacrifice the 100% of illusions

Post a Comment