மயில், குயில், பெண்...

Posted by அகத்தீ Labels:


மயில், குயில், கிளி, புறா, பட்டாம் பூச்சி, முயல், மான் என ஒவ்வொன் றும் பேரழகு. இயற்கையின் அருட் கொடை, அழகின் சிரிப்பு.
இவற்றை விரும்பாத குழந்தை கள் உண்டோ? பெரியவர் உண்டோ? மனதைக் கிறங்க வைக்கும் இவற்றை கவிஞர்கள் விடுவரோ எளிதில்?
பெண்களைப் பாடாத கவிஞர் உண்டோ? அதிலும் பெண்களை மயிலோடும் குயிலோடும் ஒப்பி டாத கவிஞரை எங்கேனும் கண்ட துண்டோ?
மயில், குயில், பெண், கவிதை இவற்றுக்கு இடையே உள்ள உறவு இயற்கையானது. முன்னை பழ மைக்கும் பழமையானது. பின் னைப் புதுமைக்கும் புதுமையா னது. ஆயினும் இன்னும் எத்தனை காலம் மயிலோடும் குயிலோடும் பெண்ணை ஒப்பிட்டுப் பாடிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? இக்கேள்வி அவ்வப்போது சீறி எழத்தான் செய்கிறது.
இக்கேள்விக்கு விடைதேடும் முன் இங்கே இரண்டு கவிதை களை சற்று பார்ப்போம். ஒரு கவி தையின் தலைப்பு மயில். இன் னொன்றின் தலைப்பு குயில்.
அழகிய மயிலே! அழகிய மயிலே என கவிதை தொடங்கும். உனது தோகை புனையாச் சித்தி ரம்/ ஒளிசேர் நவமணி களஞ்சியம் அதுவாம் என்றெல்லாம், வர்ணணை தொடரும். ஆயிரம் ஆயிரம் அம் பொற்காசுகள்/ ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்/மரகத உருக் கின் வண்ணத்தடாகம்/ஆன உன் மெல்லுடல், ஆடல் உன் உயிர்/
இவை என்னை எடுத்துப் போயின
இப்படி கவிஞர் சொல்லிக் கொண்டே போவது அவரின் ரச னைக்கு சாட்சி. ஆனால் அதோடு நிற்காமல் தன் வேலையைத் தொடங்கினார்;
நீயும் பெண்களும் நிகர் என்கிறார்/நிசம் அது நிசம் நிசம் நிசமே ஆயினும்/பிறர் பழி தூற் றும் பெண்கள் இப்பெண்கள்/அவர் கழுத்து உன் கழுத்தா குமோ சொல்வாய்/ இப்படி கழுத்துக்குத் தாவிய கவிஞர் அத்தோடு விட்டாரா? இல்லை, அப்புறம் பெண்கள் கழுத்து குட்டையாகவும் மயிலின் கழுத்து நீளமாகவும் உள்ளதற்கான கார ணத்தை கற்பனை செய்கிறார். அயலான் வீட்டின் அறையில் நடப்பதை/ எட்டிப் பார்க்கா திருப்பதற்கே/இயற்கை அன்னை இப் பெண்களுக்கெல் லாம்/குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள். உனக்கோ/ கறை யொன்றில்லா கலாப மயிலே/நிமிர்ந்து நிற்க நீள் கழுத்து அளித்தாள் என்று ஒரு குதர்க்க மான காரணத்தை சொல்லிவிட்டு மயிலே இதை வெளியே சொல் லாதே, மகளிர் கூட்டம் என்னை ஏசும் என்று நீட்டுகிறார்.
மோசமான கவிஞராக இருக் காரே! அவர் யார் எனக் கேட்கி றீர்களா? பொறுங்கள்! அவசரம் வேண்டாம். கவிதை முடிய வில்லை. இதோடு முடித்திருந்தால் அவர் சாதா கவிஞர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் மேலும் தொடர்ந்தார். அதில் பெண்கள் ஏன் அப்படி இருக்கி றார்கள் என்ற கேள்விக்கு விடை சொன்னார் புவிக்கொன்று உரைப் பேன் புருஷர் கூட்டம்/பெண் களை ஆதிப்பெருநாள் தொடங்கி/ திருந்தா வகையில் செலுத்துத லால்/அவர்கள் சுருங்கிய உள் ளம் விரிந்த பாடில்லையே என ஆண்கள் மீதே குற்றப்பத்திரிகை வாசித்தார். அதனால்தான் அவர் புரட்சிக் கவிஞர். இப்போது புரிந் திருக்குமே இக்கவிதையை யாத்த வர் பாரதி தாசன் என்பது...
இன்னொரு கவிஞர் குயில் என்ற தலைப்பில் தன் கற்பனைச் சிறகை விரித்தார் கருப்பிலே அழகு கண்கவர் கண்கள் என் றெல்லாம் வர்ணித்து தோட்ட மெல்லாம் சுற்றுவாய் விடுதலைப்/ பாட்டிலே மண்ணை மயக்கு வாய் பச்சைக் / காட்டிலே உல வும் கவிதையின் குழல் நீ / ஏட் டிலே காணா இசையின் வெள் ளம் நீ இப்படி குயில் பாட்டில் மயங்கி பிதற்றி மேலும் தொடரும் போதுதான் அவர் பெண்கள் குர லோடு குயிலின் குரலை ஒப்பிடு வதை ஏற்க மறுத்தார். உன் குரல் பெண்ணின் குரலுக் கொப்பெனப்/ பன்னுவர் கவிஞர், பாதிதான் உண்மை/ என்று அடித்து சத்தி யம் செய்தார். ச்சே...என்னாச்சு இக்கவிஞருக்கு என கேள்வி குடைய தொடர்ந்து படித்தால் புதிர் அவிழும்.
பெண்களின் குரலிலே பிணி யும் ஏக்கமும் /எண்ணிலாச் சோகமும் பயமும் அடிமையும் / நிறைந்தன ஆதலால் நேரிசைக் குரலிலே / கறையே அமைந் தது... என ஓங்கிக் குட்டினர். ...கவின் குயிலே.உன் / விடு தலைக்குரலிலே வெற்றி எக்கா ளம் / நடுங்கும் பெண்களின் நற்குரல் தன்னிலே / விடுதலை இசையும் வீரமும் இல்லையே இப்படி ஒப்பிட்டு மனம் புழுங் கினார் கவிஞர். ஆனால் இதோடு நின்றிருந்தால் அவர் கவிதை காலமழையில் கரைந்து போயிருக் கும். ஆனால் இவர் கவிதை சாகாத கவிதை ஆயிற்றே! அவர் இறுதி யாகச் சொல்வார், பெண்கள் இந் நிலை அடைந்ததற்கு யார் கார ணம் என்பதை, அவர் கூறுகிறார்;
கெடுதலை செய்தனர் ஆணி னக் கிறுக்கர் / கூவுவாய் குயிலே குவலயத்தில் இனிமேல் / மேவும் சமநிலை மேவிடும் என்றே
இந்த சவுக்கடி வரிகளில் சிலிர்த்தெழுகிறார் கவிஞர் தமிழ் ஒளி.
மயிலைப் பாடிய கவிஞர் பாரதி தாசனும் குயிலைப்பாடிய கவிஞர் தமிழ் ஒளியும் பெண்ணடிமைத் தனத்தை சாடியதோடு அதற்கு ஆண்களே காரணம் என நறுக் கென்று குத்தீட்டியாய் கவிதை யைப் பாய்ச்சினர். ஆக எதையும் பாடு பொருளாக்கலாம். ஆனால் பார்வை எது என்பது தான் முக்கி யம். சரிதானே/

1 comments :

  1. K.CHINNIAH

    எல்லாம் சரிதான்! விமர்சனம் மட்டும்தான் உங்களால் முடியும் என சிலர் நினைக்கலாம்! நான் நினைக்க முடியாதே? இதை வழியொற்றி,படைப்புகள் முடியுமே உன்னால்! சிந்தனையை தூங்க விடாதே! பட்டறிவிலிருந்து படைப்புகளை பரிமாறு! ஆய்வுகளும் முடியுமே உன்னால்! எழுவாய்! எழுதுவாய்! வாழ்த்துக்கள்!

Post a Comment