குடும்பத்திலும் நாட்டிலும்

Posted by அகத்தீ Labels:

 


குடும்பத்திலும் நாட்டிலும்





 

 

எப்போதும்

தலைவர் சர்வாதிகாரியாகவே இருக்கிறார்

கடினமாகவோ மென்மையாகவோ!

 

நிரந்தர இரண்டாமிடத்தவர்

புழுங்கிக் கொண்டே இருக்கிறார்

கூடுதலாகவோ குறைவாகவோ!

 

மூத்த குடிமக்கள்

புறக்கணிப்பதாய் புலம்பித்தீர்க்கிறார்கள்

பகீரங்கமாகவோ மனதிற்குள்ளோ !

 

இளையதலைமுறை

கோபத்தோடேதான் மோதுகிறார்கள்

மூத்தோர் வழிவிடவில்லை என்றே !

 

குழந்தைகளைக்

கொண்டாடுவதாய் பேசிக்கொண்டே

கூண்டுக்கிளி ஆக்கவே முயல்கிறார்கள் !

பாசம் வேஷம் நீதி அநீதி

விசுவாசம் துரோகம் லாபம் நட்டம்

ஏற்றம் இறக்கம் நட்பு பகை

 

குடும்பத்திலும் நாட்டிலும்

எல்லாம் இப்படித்தான்

ஜனநாயகம் பேச்சோடுதான்!

 

போராடித்தான்

எங்கும் எல்லோரும்

மூச்சுவிட முடிகிறது !

 

சுபொஅ.


0 comments :

Post a Comment