சிம்மாசனங்களின் கதை

Posted by அகத்தீ Labels:




சிம்மாசனங்களின் கதை

சிம்மாசனங்கள்
உடைக்க முடியாதவை அல்ல.
வரலாற்றின் ராஜபாட்டை எல்லாம்
நொறுக்கப்பட்ட சிம்மாசனங்கள் மீதே
வென்றவர்களின் வரலாறு
தோற்றவர் மீதே எழுதப்படுகிறது
வென்றவர் சொல்லே வேதம் ஆகிறது

விக்கிரமாதித்தன்
சிம்மாசனம் மட்டுமல்ல
எல்லா சிம்மாசனத்திலும்
படியேற ஏற தலைக்கனம் ஏறும்
உச்சத்தில் உட்கார்ந்ததும்
ஆட்டம் துவங்கும் அழிவும்தான்

காலந்தோறும்
சிம்மாசனங்கள் தம் சவக்குழியையும்
தானே வெட்டிக்கொள்கின்றன

ஏழை சொல்லும் அம்பலமேறும்
பொன்னுலகக் கனவில்
மிதந்தால் கனவே மிஞ்சும்
சம்மட்டிகளால் சிம்மாசனங்கள்
உடைத்தெறியப்படும் நாள் வரும் !

கனவு மெய்ப்பட
உன் போர்நடைப்பாட்டை
உரக்கப்பாடு ! மேலும் ! மேலும் !
உரக்கப்பாடு ! இன்னும் பாடு !
கடைசிக்கும் கடைசியில் கிடப்பவன்
நெஞ்சங்கள் கொந்தளிக்கும் வரை
போர்நடைப்பாட்டை உரக்கப்பாடு !

சுபொஅ.




0 comments :

Post a Comment