corana kalak kanavu

Posted by அகத்தீ Labels:





#கொரானா காலக் கனவு ….

தூக்கமும் துண்டு துண்டாய்
கனவும் அப்படித்தான்
நீண்ட நேரம் தூங்கி வெகுநாளாச்சு
முதுமையின் ஓர் குணமோ இது .


இப்போதெல்லாம் என் கனவில்
நந்தவனம் இல்லை
தென்றல்  இல்லை
தேனிசை இல்லை
கொஞ்சுவதில்லை
மகிழ்ச்சி இல்லவே இல்லை.


அழுகை, பற்கடிப்பு,
ஒப்பாரி, மரண ஓலம்,
பொய், பித்தலாட்டம்.
துரோகம், வஞ்சகம்
சகிக்க முடியாததாய்ப் போகும்
வாழ்வின் நடப்பு
கனவாய் நீட்சி பெறுகிறதோ !!


எப்படியோ
ஒவ்வொரு நாளும்
துப்பாக்கியோடும்
ஆவேசமாய் ஆர்ப்பரிக்கும்
உழைக்கும் தோழரோடும்
முடிகிறது கனவு.
விடிகிறது பொழுது !!!

சுபொஅ.


0 comments :

Post a Comment