என்னை உண் ! உன் விழிகளால்..

Posted by அகத்தீ Labels:






என்னை உண் ! உன் விழிகளால்



பச்சை வயல் ஏன்
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது ?

வளைந்த தென்னைமரம் ஏன்
என்னைப் பார்த்து கண்ணடிக்கிறது ?

குளமும் ஏரியும் ஓடையும் ஏன்
தாளங்கொட்டி என்னை அழைக்கிறது ?

மலையும் குன்றும் ஏன்
வழிமறித்து கூப்பிடுகிறது ?

கொஞ்சம் காது கொடுத்தேன் ஒரேகுரலில்
ஒவ்வொன்றும் என்னோடு பேசியது

கடைசியாக என்னைப் பார்த்துகொள்
இனியொரு வாய்ப்பில்லை !

ஓவியமாய்த் தீட்டிக்கொள் !
நிழல்படமாய் கிளிக்கிக் கொள் !

கவிதையில் அழகு செய் !
கதையில் வர்ணித்துமுடி !

வளர்ச்சி சுடுகாட்டில்
இனி எமக்கு இடமில்லை !

எட்டும் வழியெல்லாம் விரைந்து
என்னை உண் ! உன் விழிகளால்

சு.பொ.அகத்தியலிங்கம் .









0 comments :

Post a Comment