சும்மா கிடந்த சொல்லை எடுத்து - [ 14 ]

Posted by அகத்தீ Labels:






சும்மா கிடந்த சொல்லை எடுத்து - [ 14 ]


சேரியின் வெற்றி.. நீதியின் வெற்றி..

சு.பொ. அகத்தியலிங்கம்


“ எக்களிப்புக் கொள்ளுதடா / பறையோசை எங்கும் ! / எதிர் நின்ற சாதிவெறி / மதவெறி எல் லாம் / சுக்காகப் போயிற்றுப் / பறையோசை ஓடிச் / சுதந்திரத் தைச் சொல்லியுமே / முழக்கு தடா ஊரில் . ”கவிஞர் தமிழ் ஒளியின் இக் காவியக் கனவு கைகூடும் நாள் விரைவதாக என ஆசைப்படத் தான் முடிகிறது . அனுபவம் வேறாக இருக்கிறது .

“ பயணம் ” என்ற தலைப்பில் கவிஞரும் சட்டமன்ற உறுப்பி னருமான பாலபாரதி எழுதிய கவிதை சமூக ஏற்றத்தாழ்வையும் சாதியக் கொடுமையையும் ஒருங்கே சொல்லும் :

“ சாலை ஓர மரங்களற்ற /நாற்கர சாலையில் பயணித்து, / ஆங்காங்கே தடுத்த / சுங்கச் சாவடிக்கு வரிசெலுத்தி / குண் டும் குழியுமான மாநில / நெடுஞ் சாலையில் திரும்பி, / பல ஆண்டு களாய்க் கட்டி / முடிக்கப்படாத பாலத்தின் / மீதேறி, / வீட்டடி மனைகளாக மாறி நின்ற / முன் னாள் விளை நிலங்களை / கடந்து, / ஒத்தையடி மண்பாதையில் / நடந்து, / எப்படியெல்லாமோ / தூரங்களைக் கடந்தும் / உன் னைப் பார்க்க முடியாத / பயணக் களைப்போடு / திரும்பி வந்தது / காதல் / சாதியைக் கடக்க / வழி இல்லையென்று !”தருமபுரி இளவரசன் மரணம் தந்த வலியோடு இக்கவிதையை மீண்டும் அசைபோட்டால் இரத் தக்கண்ணீர் வரும் .

பட்டுக்கோட்டை தனக்கு திரைப்படத்துறையில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திரைப்பட உலக வரம் புக்குள் நின்று கொண்டு சாதிக்கு எதிராக நிறையவே பாடினான் . “நீதியின் வெற்றியடா / சேரி யின் வெற்றி - அதை / நிரந்தர மாக்குதுபார் /பொதுஜன சக்தி” (புதுமைப்பெண் 1959) என முழங்குவார். பொதுஜன சக்தி வீறு கொண்டெழும்போதுதான் சேரியின் வெற்றி நிரந்தரமாகும் என்கிற கூர்மையான பார்வை இதில் எளிமையாய் வெளிப்பட் டிருப்பதைக் காணலாம் . அதே பாடலில் தொடர்ந்து கூறுவார் “ஜாதிகள் பேசி நம்மைத் / தள்ளி வச்சி வாழ்ந்தவங்க / சாக்கடைப் பூச்சிகளாய் / ஏழைகளை நினைச் சவங்க / தனக்கே ஊர்முழுவதும் / சொந்தமென்று வளைச்சவங்க / சட்டங்கள் மாறிவரும் / நேரம் என்ன ஆனாங்க - எல்லாம் / சரிசமமாய்ப் போனாங்க ” என நில உறவையும் சாதிக்கொடு மையையும் பிணைத்துத் தீர்வு சொன்னார் .


“ ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும் / தேதியில் தோன்றும் பொதுமை ” (ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) பெண் ஜாதி பேதம் தொலைந்து ஒன்றாகும் போதே சமூகக் கொந்தளிப்பு மாறும் என்று பெண் சொல்லு வாள்.அதற்கு ஆண் சொல்லு வான் , “ சண்டைகள் தீர்ந்தே மனி தர்கள் சேர்ந்தால் / தாரணியில் அது புதுமை.” மெய்தானே சாதிச் சண்டைகள் தீர்வது நம் சமூகத் தில் மகாபுதுமைதான் . அவ்வளவு சீக்கிரம் நடந்துவிடுமா என்ன ?இப்படி சிலபாடல்களில் சாதியத்துக்கு எதிராகச் சீறி இருப்பார் பட்டுக்கோட்டை . ‘ஆளுக்கொரு வீடு’( 1960) படத் தில் அங்காளம்மனுக்கு பொங் கல் வைக்கும் நாட்டுப்புற வழிப் பாட்டை முன்வைத்து பாடிய பாடலில் முழுமையாக சாதியத் துக்கு எதிராக உரக்கப் பேசியி ருப்பார் .

“ ஊருக்கெல்லாம் ஒரே சாமி / ஒரே சாமி ஒரே நீதி / ஒரே நீதி ஒரே ஜாதி / கேளடி கண்ணாத்தா” என தொடங்கும் அப்பாடலில் அடுத்தடுத்த வரிகளில் எளிமை யும் கூர்மையும் மிகுந்த வாதங் களை அடுக்குவார் . “ மூச்சுக் கெல்லாம் ஒரே காத்து / ஒரே காத்து ஒரே தண்ணி / ஒரே வானம் ஒரே பூமி / ஆமடி பொன்னாத்தா!” மேலும் தொடர்வார் , “ எல் லொருக்கும் உலகம் ஒண்ணு / இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு / இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு / நானும் ஒண்ணு தானே / யாரு மேல கீறினாலும்/ ரத்தம் ஒண்ணுதானே / ஆக மொத் தம் பிறந்ததெல்லாம் / பத்தாம் மாசம் தானே ” இதுக்கு மேலுமா சாதி இயற்கையானதல்ல என் பதை நெற்றிப் பொட்டில் அறைந்து கூற முடியும் ? ஆனால் இங்கே ‘படித்த சில டாக்டர்’களுக்கே இது இன்னும் புரியவில்லையே! பட்டுக்கோட்டை மேலும் சொன்னார் , “ உயிருக்கெல் லாம் ஒரே பாதை / ஒரே பாதை ஒரே வாசல் / ஒரே கூடு ஒரே ஆவி / பாரடி கண்ணாத்தா ."

இப்படி அம்மனை கும்பிட்டு ஆடும் போதே சாதியத்துக்கு எதிரான கலகக்குரலை உரக்க ஒலித்திடு வார் . வார்த்தைகள் இந்த வரிக ளில் ஆடைகட்டியிருந்தாலும் கேள்வி அவ்வளவு பட்டவர்த் தமானது அல்லவா ? மண்டை யில் ஆணி இறக்கும் வாதம் .ஆயினும் ஒரு கேள்வி இப் போது எழுவது தவிர்க்க இயலாது; சாதிக்கு எதிராக சங்கநாதம் முழங்கிய பட்டுக்கோட்டை சாதி யத்தின் கொடிய கூறான தீண் டாமை குறித்து ஏன் பாடவில்லை ? அதற்கு மூன்று காரணங்களைக் கூற முடியும் .

முதலாவதாக , அவர் வாழ்ந்த பயின்ற தஞ்சை மண்ணில் தீண் டாமையையும் சாதிய ஒடுக்கு முறையையும் வர்க்க ஒடுக்கு முறை யையும் ஒன்றாகக் கருவறுக்கும் செங்கொடிப் போராட்டம் நடந் ததும் ; சாணிப்பால் சவுக்கடிக் கும் பண்ணை அடிமைத்தனத் துக்கும் எதிராக சீனிவாசராவ் தலைமையில் செங்கொடி நிழலில் உழைக்கும் மக்கள் அணிதிரண் டதும் ; இவர் அந்த இயக்கத் தோடு உறவு கொண்டிருந்ததும் அவரை அதே திசைவழியில் சிந்திக்கத் தூண்டியிருக்கலாம் . நாம் முதலில் மேற்கோள் காட்டிய பாடல் அதற்குச் சான்று .

இரண்டாவதாக , சாதியக் கொடுமையை அவர் அறிந்த போதிலும் திரைப்பட உலகின் வரம்பில் அவரால் ஒரு எல்லை யைத் தாண்ட இயலவில்லையோ! அடுத்து வரும் மேற்கோள்களில் அதனை உணர முடியும். இன்றைக்குகூட தீண்டாமை யின் கொடிய வலியைச் சொல்லும் பாடலை திரைப்படத்தில் இடம் பெற்றுவிடச் செய்யும் சூழல் இல்லையே ! பட்டுக்கோட்டை காலத்தின் நெருக்கடிகளுக்குள் நின்று கொண்டி ருந்த போதிலும் இயன்றவரை பாடினான் என்றே கொள்ள வேண்டும் .

மூன்றாவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெ ரும் தலைவர் தோழர் பி.டி. ரணதிவே சுட்டிக்காட்டியது போல் கடந்த கால்நூற்றாண் டுகளாக தலித் மக்களிடம் வலுப் பெற்றுள்ள “போர்க்குணம் மிக்க விழிப்புணர்வு”;பட்டுக்கோட்டை காலத்தில் அதே வேகத்தில் அதே தொனியில் மாநிலம் முழுமையிலும் இருந்ததாகச் சொல்ல இயலாது .கீழத்தஞ்சையிலும் வேறுசில இடங்களிலும் உழைக்கும் வர்க்க எழுச்சியோடு சாதியத்துக்கு எதிரான உரத்த குரல் ஒலித்தது.. இத்த னைக்கு மத்தியிலும் சாதியத் துக்கு எதிராய் தனது வலுவான குரலை பட்டுக்கோட்டை பதிவு செய்திருப்பதை மேலே கண்டோம் . அதுதான் பட்டுக் கோட்டையின் வெற்றி .

இன்று சாதி ஆதிக்க சக்தி கள் வேறு வகையில் தலித் மக்க ளுக்கு எதிராக அணிதிரள்வதும்; சாதியை உயர்த்திப் பிடிப்பதும் கவலை அளிக்கிறது . நுட்ப மானமுறையில் இந்த வக்கிரம் வெளிப்படுத்தப்படுகிறது; காலந்தோறும் தொடரும் இக் கொடுமையை அதன் போக் கிலே படம் பிடிக்கிறார் “ வலி” என்ற கவிதையில் ராசை.கண் மணி ராசா,

“ சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்.

காலில் செருப்பணிந்தால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்

பறைக்கு எதுக்குடா படிப்பு என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்

‘உங்களுக்கென்னப்பா?
சர்க்காரு வேலையெல்லாம்
உங்க சாதிக்குத்தானே’-என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ!

ஒன்று செய்
உன்னை அறியாத ஊரில் போய்
உன்னைப் பறையனென்று சொல்!
அப்போது புரியும் என் வலி! "

இது போன்ற வலியைப் பாடும் சூழல் பட்டுக் கோட் டைக்கு வாய்க்கவில்லை . ஆயி னும்பட்டுக்கோட்டை ஏழைக ளின்வலியை எப்படி எதிரொலித் தான் எனத் தொடர்ந்து பார்ப் போம்.

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை  4ஜூலை 2014

0 comments :

Post a Comment