அமுக்கப்பட்ட நிலங்கள், படையெடுக்காத பொக்ளின்கள்

Posted by அகத்தீ Labels:



அமுக்கப்பட்ட நிலங்கள், படையெடுக்காத பொக்ளின்கள்


   "நில உச்சரவரம்புச் சட்டம், பூமி தான இயக்கம் ஆகியவற்றை லட்சியக் கனவு
நிறைவேறியதாகக் கொள்ளலாமே தவிர, வெகுஜனக் கனவு நிறைவேறிய தாகக் கொள்ளமுடியாது. இவ்வாறாக நிலம்பெற்ற விவசாயிகளும்கூட, இந்த நிலத்தைத்தொடர்ந்து தங்கள் வசம் வைத் துள்ளார்களா என்பதே கூடச் சந்தேகம் தான்.பஞ்சமர் நிலங்கள் எவ்வாறு மற்ற வர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு,பத்திரங்கள் மாற்றப்பட்டனவோ அதே போன்று பல சம்பவங்களில் நிலமற்ற ஏழை கள்,கொஞ்ச காலத்துக்கு நிலத்தைப் பயன்படுத்தியதோடு சரி. மீண்டும் அவர் கள்நிலமற்ற விவசாயிகளாக மாறும் சரித் திரம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது."

இது இன்றைய தினமணி நாளேட் டின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
வார்த்தைகள். நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்க வேண்டும் என்றபிரதான கோரிக்கை உட்பட் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து குவாலியர்நகரிலிருந்து புதுதில்லிக்கு சுமார் 20,000 விவசாயிகளுடன் மேற் கொண்ட ஜனசத்யாகிரக இயக்கத்தின் பேரணியை ஆக்ரா நகரத்திலேயே தடுத்து நிறுத்திமத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்  வாக்குறுதிஅளித்துள்ளார். அதையொட்டி தின மணி எழுதிய தலையங்கத்தில்தான் மேற் கொண்டவார்த்தைகள் இடம் பெற்றுள் ளன.

நில உச்சவரம்பு என்பது வெறும் கண் துடைப்பாகவே பெரும்பாலான மாநிலங் களில்மாற்றப்பட்டது என்பது உண்மை தான். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் 30ஸ்டாண்டர்டு ஏக்கராக இருந்த நில உச்சவரம்பு, திமுக ஆட்சியில் 15 ஸ்டாண்டர்டு ஏக்கராகக் குறைக்கப்பட்டதை கலை ஞர் அடிக்கடி பெருமையாகக் கூறுவார்.ஆயினும் நில விநியோகத்தில் தமிழகம் சாதனை எதுவும் படைக்கவில்லை. ஏன்?


இந்தியா முழுவதும் இவ்வாறு நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டமொத்த நிலங்களில் 25 விழுக்காடு மேற்கு வங்கத்தில் அதுவும் இடது முன்னணிஆட்சியின்போது விநியோகிக்கப்பட்டது என்பது அடிக்கோடிட்டு மீண்டும்மீண்டும் சொல்லப்பட வேண்டியிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் 2008 ஆம் ஆண்டு வரையிலான நில விநியோகம் பற்றிய சில தகவல்கள் இதோ:


உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப் படுத்தப்பட்ட நிலங்களின் பரப்பளவு:
13,13,729 ஏக்கர் பட்டா அளிக்கப்பட்ட பரப் பளவு : 10, 36, 432 ஏக்கர்.
பட்டா பெற்றவர் கள் : 29,83,640 பேர்.இவர்களில் தலித் மக்கள்: 11,05,306 பேர்,  பழங்குடி மக்கள் 5,36,565 பேர்என் பது கூடுதல் செய்தி.

தலித்துகளும் பழங்குடி மக்களும் மக்கள் தொகையில்30 விழுக் காட்டினர்தாம் ஆனால் நில சீர்திருத்த பயனாளிகளில் அதாவதுநிலம்பெற்ற வர்களில் 56 என்பது உரக்கப் பேசவேண் டிய செய்திகள்.

அதேபோல்சிறுபான்மை மக்கள் தொகையில் விழுக்காட்டினரே ஆனால் நிலம்பெற்ற பயனாளிகளில் 36 விழுக்காட்டினர் ஆவர். 5,90,427 பட்டாக் கள் ஆணுக்கும்பெண்ணுக்கும் இணைந்து தரப்பட்ட பட்டாக்கள் என்பதும் 1,59,990 பட்டாக்கள்பெண்களுக்கு மட்டும் தரப் பட்டவை என்பதும் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியசெய்தியாகும்.

மேலே குறிப் பிடப்பட்டிருப்பது நில மறுவிநியோகத்தில்
பயன்பெற்றவர்கள். இது தவிர, 15 லட்சத் திற்கும் மேற்பட்ட குத்தகை
சாகுபடியாளர் கள் ஆப்பரேஷன் பார்கா திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுப்
பயனடைந்துள்ளனர்.இதனால்தான் இன்றும் உணவு உற் பத்தியில் மேற்குவங்கம் முன்னிலையில்உள்ளது.

இத்தகைய பெருமைகளை  மக் கள் நலம் சார்ந்த நற்செயல்களை வெளிச் சம்
போட்டுக் காட்டவில்லை என்பதுமட்டு மல்ல தொட்டுக்கூட காட்டுவதில்லை.விதிவிலக்காக மம்தாவாலும் ஊடகங் களாலும் ஊதிப் பெரிதாகக் காட்டப்பட்டநந்திகிராம் சம்பவம் சில நூறு ஏக்கர் சம் பத்தப் பட்டதே. அதுவும்வேண்டுமென்றே மிகமிக தவறான கோணத்தில் சித்தரிக்கப் பட்டது என்பதே உண்மை.காலங்கடந்து அப்பகுதி மக்கள் தாங்கள் மம்தாவின் முதல்வர் கனவுக்குப்பகடைக்காயாக ஆக்கப்பட்டுவிட்டோம் என உணர்கின் றனர்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பதுபோல் ஆயிரம்வகைகளில் மேற்குவங்க இடது சாரி அரசை ஊடகங்கள் சிறுமைப் படுதி னாலும்மேற்குவங்க இடதுசாரி அரசின் நிலச்சீர்திருத்த சாதனையை மறைக்கவே முடியாது.

நில மறுவிநியோகத்திற்கான கம்யூ னிஸ்ட்டுகளின் நிலச்சீர்திருத்தப் போராட்
டங்களைத் திசை திருப்ப வினோபா அன்று பூமிதான இயக்கம் என்பதையே
அறிவித்தார். இந்த இயக்கம் படுதோல்வி அடைந்தது. நிலம் வைத்துள்ள எவனும்தன் நிலத்தைத் தானமாகத் தரமாட்டான் என்பதை வரலாறு உணர்த்தியது. தாம்பெற்றதில் பெரும் பகுதி வெறும் பொட்டல் காடு என்பதையும், பல இடங்களுக்குஉரிய ஆவணங்களே இல்லை என்பதை யும், ஆகவே பெரும்பகுதி பயன்பட வில்லைஎன்பதையும் பின்னர் வினோ பாவே மனம் புழுங்கி ஒப்புக்கொண்டார்.

தமிழகத்தில் நிலச்சீர்திருத்தம் கிட்டத் தட்ட தோல்வியே. தரிசு நிலங்களை
வழங்க ஆளுக்கு 2 ஏக்கர் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார்
கலைஞர். அறி விக்கிறபோதே ஐம்பதினாயிரம் ஏக்கர் தரிசு நிலம்
விநியோகிக்கப்படும் என்ற வாக்குறுதியும் அளித்தார். தேர்தல் பிரச்
சாரத்தில் அவ்வளவு நிலம் தமிழகத்தில் கிடையாது என ஜெயலலிதா கிண்டலடித்தார். முந்தைய ஜெ ஆட்சியின் போது ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளதைகலைஞர் எடுத்துக் காட்டினார். அது தவ றான தகவல் என்பதை தாம் பின்னர்தெரிந்து கொண்டதாக ஜெயலலிதா பதிலடி தந்தார்.

அப்படியானால் சட்டமன்றத்தின் மூலம் ஜெயலிதா பொய சொல்லி யிருந்தார் என்றாகிறது. ஆயினும் அதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை.
முந்தைய ஜெயலிதா ஆட்சியின் போது தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்
சட்டமன்ற உறுப்பினர் ஹேமச்சந் திரன் கேள்வி எழுப்பியபோதெல்லாம் முதல்வர்ஜெயலிதா எரிச்சலடைந்தார். ஒரு கட்டத்தில் எரிச்சலின் உச்சத்திற்கே போய்இனி ஹேமச்சந்திரனுக்கு நானும் பதில் சொல்லமாட்டேன் மற்ற அமைச்சர் களும்பதில் சொல்ல வேண்டாம் என்று சொன்னார்.

ஆட்சிக்கு வந்த கலைஞர் உள்ளங்கை நிலம் இருந்தாலும் விநியோகிப்பேன்எனக்கூறி கொஞ்சம் விநியோகித்தாரே தவிர அந்த ஐம்பதாயிரம் ஏக்கர் தரிசு நிலமும் எங்கே இருக்கிறது என்று கண்டறிய முயலவில்லை. மார்க்சிஸ்ட் கட்சிமாநாடு நடத்தி தரிசு நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிற தோட்டமுதலாளிகள்.ஆலை முதலாளிகள், பெரியமனிதர்கள் ஆகியோரிபட்டியலைவெளியிட்டது.அண்ணாசாலையில், அந்தப் பெரிய அரங்கில் மாநாடு நடந்தும், அதற்குஊடகக்காரர்கள் நிறையப்பேர் வந்திருந் தும் அது பரப்பான செய்தியாக்கப்பட
வில்லை. எந்த புலனாய்வுப் ஊடகப் புலி களும் இதனைப் புலனாய்வு செய்துதமிழ் மக்களுக்கு உண்மைகளைச் சொல்ல முன்வரவில்லை.


மீண்டும் ஆட்சிக்குவந்துள்ள ஜெய லலிதாவும் பழைய திமுக அமைச்சர்கள், திமுகபுள்ளிகள் விழுங்கிய நிலங்களை தேடிக்கண்டுபிடித்து வழக்குத் தொடர் கிறது.அது சரியானதுதான். ஆக்கிரமிப்பு யார் செய்யினும் தவறே. அகற்றப்பட
வேண்டும். ஆனால் தரிசு நிலங்களை அமுக்கி வைத்துள்ள முதலாளிகள்ஏனைய பெரியமனிதர்கள் மீது வழக்குப் பாய்வ தில்லையே ஏன்? பொக்ளின் எந்திரம் அவர்களதுஅந்த ஆக்கிரமிப்பு நிலங் களை நோக்கிப் படையெடுப்பதில்லையே? ஏன்?

திமுக,அஇஅதிமுக இரண்டும் இந்த விசயத்தில் ஒன்றுதான். காங்கிர ஸும் பாஜகாவும்அப்படித்தான். குஜராத் தின் மோடி ஆட்சியில் நில விநியோகக் கதையைக்கேளுங்கள். இவர்களுக் கெல்லாம் இதில் அக்கறை கிடையாது என்பதே உண்மை.


 "தீர்வுக்கான தொடக்கம்" என தினமணி தீட்டிய தலையங்கத்தில் மேலே சுட்டிய விபரங்கள் எதுவும் இருக்காது.ஆம்.உண்மையை அடையாளம் காட்டாமல் பொத்தாம் பொதுவாய் எழுதிச் சுரண்டும் வர்க்க சேவை செய்வதுதான் அதன் பாணி. அப்படித்தான் அந்த பேரணியையும் பாராட்டி உள்ளது .ஆயினும் அது ஒருபோதும் சொல்ல விரும்பாத உண்மை ஒன்று உண்டு.ஆம்,அது என்ன தெரியுமா?

சகல சிக்கலையும் தீர்க்கும் உயிர் முடிச்சு நிலக்குவியலை உடைத்து நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவதில்தான் உள்ளது.இதனை இடதுசாரிகளே தொடர்ந்து கூறிவருகின்றனர்.போராடி வருகின்றனர்.மேற்கு வங்கம்,கேரளம்,திரிபுரா இங்கெல்லாம் அமல் நடத்திக் காட்டினர். அந்த இடதுசாரிகளின் பாதையே விடியலின் பாதையாகும்.

சு.பொ.அகத்தியலிங்கம் 
நன்றி ; தீக்கதிர் 18-10-2012
 

0 comments :

Post a Comment