ஒவ்வொருவர் வீட்டிலும் மனதிலும் விவாதக் களம் அமைக்க...

Posted by அகத்தீ Labels:


ஒவ்வொருவர் வீட்டிலும் மனதிலும் விவாதக் களம் அமைக்க...

சு.பொ. அகத்தியலிங்கம் 
 

தமிழகப் பண்பாட்டுச் சூழல் ,வெளியீடு :தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ,11-எ , மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி ,மதுரை - 62 610 .பக் :160 , விலை : ரூ . 65 .
 
காலம் ரொம்ப மாறிப் போச்சு ; பண்பாடு ரொம்ப கெட்டுப் போச்சு என்கிற அங் கலாய்ப்பை பரவலாகக் கேட்கி றோம் . பண்பாடு குறித்த விவாதம் வேண்டும் ; ஆய்வு வேண்டும் என் கிற அக்கறை மிக்க குரலும் ஆங் காங்கே ஒலிக்கிறது . எங்கிருந்து தொடங்குவது என்பதுதான் அடிப் படையான கேள்வி . வெறும் கை யில் முழம் போட முடியாது .

யாராவது எங்காவது தொடங்கி வைத்தால் அதை ஒட்டியும் வெட்டியும் விரித் தும் தறித்தும் விவாதிப்பது சாத்தி யம் . த.மு.எ.க.ச தற்போது முன் கை எடுத்து ஒரு ஆவணத்தை உருவாக் கித் தந்துள்ளது .விவாதத்திற்கான வாய்ப்பு வாசலைத் திறந்துள்ளது . இது தனியொருவரின் கனவில் பூத்த ஒன்றல்ல ; கூட்டு உழைப்பில் செதுக் கப்பட்ட ஆவணம் . ஆம் , தூத்துக் குடியில் நடைபெற்ற தமுஎகச சிறப் புமாநாட்டில் 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கூடி விவாதித்து இறுதி யாக்கிய கூட்டு ஆவணம் . இதன் சிறப்பும் பலமும் இதுவே .இந்த ஆவணம் எட்டு அத்தி யாயங்களைக் கொண்டது .

முதல் அத்தியாயம் மட்டுமே அருணன் பெயரில் வெளியாகியுள்ளது . மற் றவை கூட்டுப் படைப்பென ஊகிக் கலாம். ‘பண்பாட்டைக் கட்டமைக் கும் கூறுகள்’ என்கிற முதல் பகுதி ஆவ ணத்தின் நுழைவாயில் போல் அமைந்துள்ளது. இதில் பண்பாடு குறித்த பொது வரையறையும் செல்ல வேண்டிய திசை வழியும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது . “ தமிழகத்தில் இன்று நிலவுகிற வாழ்க்கை முறை கள் மீது அந்தப் பொதுப் பண்பாட் டின் மீது நமக்கு மரியாதை இல்லை தான்.ஆனால் மாற்றுப் பண்பாடு என்பது அந்தரத்தில் இருந்து இறங்கி வருவதில்லை என்பதை மறந்து விடக்கூடாது. அது ஏற்கனவே உள்ள பண்பாட்டின் நல்ல கூறு களை எடுத்துக் கொண்டு ,நவீன வாழ்வு தரும் புதிய நல்ல கூறுகளைச் சேர்த் துக் கொண்டு பரிணமிப்பது.”இந்த வரையறை த.மு.எ.க.ச வின் நேர்மை யான நிதானமான அடிவைப்பின் இலக்கணம் எனில் மிகை அல்ல.

‘தாய் மொழிக்கல்வி’ , ‘மதவெறி அரசியல்’ , ‘சாதியப் பாகுபாடு’ , ‘பெண் கள் மீதான வன்முறை’ , ‘ஊடக அரசி யல்’ , ‘மாற்றுப் பண்பாடு’ என ஆறு தளங்களில் பண்பாட்டு விவாதம் முன்னெடுக்கப்பட்டிருகிறது . இவை அனைத்தும் இன்றைய அரசியல் பொருளியல் வாழ்வோடு நேரடியாகப் பிணைந்தவை .ஆக , இவ்விவாதம் பண்பாட்டு அரசியல் விவாதமாக நீட்சி பெறுவது தவிர்க்க இயலாதது .தாய்மொழிக் கல்வி குறித்த வரலாற்றுப் பின்புலத்தோடும் இன் றைய நெருக்கடியோடும் இணைந்து பேசும் இந்த ஆவணம் ; செய்ய வேண் டியது என்ன என்பதையும் பட்டியலிடு கிறது .
ஆங்கிலக் கல்வி மீதான மோக மும் ஈர்ப்பும் ஏற்படக் காரணம் என்ன ? அதற்கான சமூக உளவியலின் வேர் எது ? உலக மயமாக்கலின் விளைவன் றோ இது . இதை இன்னும் உரக்க விவா திக்கவேண்டும். கல்வியில் மட்டு மல்ல எல்லா இடங்களிலும் தம்மொழி பெரும் சிதைவுக்கு ஆளாவதில் உல கமயப் பண்பாட்டு ஆதிக்கமும் ஒரு கூறல்லவா ? இது குறித்தும் பேசியாக வேண்டுமே!

‘மதவெறி அரசியலும் சேதுசமுத் திர திட்டமும்” என்கிற விவாதம் பண்பாட்டுத் தளத்திலும் அரசியல் தளத்திலும் காத்திரமானது. அவசியமா னது. இந்துத்துவ அரசியல் மூர்க்கம் பெற்று வரும் வேளையில் .விரிவாக வும் ஆழமாகவும் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டியது ; அதே சமயம் இஸ்லாமிய, கிறிஸ்த்துவ , இதர மத வெறியையும் சரியான கோணத்தில் சுட்டிக்காட்டாவிடில் இந்துத்துவ வெறியர்களுக்கு நாமே இடம் கொடுத் ததாகி விடும் . இதனையும் சேர்த்து இப்பகுதி கூர்மைப்படுத்தப்பட வேண் டும்.

சாதியப் பாகுபாடும் வன்கொடு மைகளும் என்கிற பகுதி காலத்தின் கட்டாயம். “சாதியத்தைப் புரிந்து கொள்ளாமல் இந்திய சமூகத்தை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது . சமப்படுத்தவும் முடியாது.
 ” என ஆவணம் சரியாக கணிக்கிறது . சாதி எதிர்ப்பை வெறும் பார்ப்பன எதிர்ப்பாக சுருக்கிவிட்ட தமிழகச் சூழல் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது . சாதியத்தைப் பாதுகாப்பதில் சடங்குகளின் பாத்திரம் குறித்து பேசப்பட்டுள்ளது ; இது குறித்து தனித்தே விவாதிக்க வேண்டி யுள்ளது .“ சாதியப் படிநிலையை வெறும் ரத்தக்கலப்பினால் மட்டுமே குலைத்து விட முடியாது என்பதைப் போலவே ரத்தக் கலப்பு நிகழாமலும் குலைத்து விட முடியாது ”எனவும் ; “தீண்டா மைக்கு எதிரான போராட்டத்தை நிலத் தில் மட்டுமல்ல மனத்திலும் நடத்த வேண் டும்”எனவும் ஆவணம் குறிப்பிட்டி ருப்பது கவனத்திற்குரியது .அதுவும் தருமபுரி நிகழ்விற்குப் பின் சாதியத்துக் கெதிரான போர் தமிழக பண்பாட்டுச் சூழலில் முக்கிய இடத்தைப் பெறு கின்றதன்றோ!சாதியமும் பெண்கள் மீதான வன் முறையும் நாம் மானுடன் எனக் கூறிக் கொள்ளும் அருகதையையே பறித்து விடுகிறது .

“மனம் எனும் பதுங்கு குழி களுக்குள் ஆளும் வர்க்க சாதிய சித் தாந்தத்தைச் சுமந்து கொண்டு பெண் விடுதலையையோ சமூக விடுதலை யையோ நோக்கி நம்மால் நகரத்தான் முடியுமா ? கொடியை ஏற்றத்தான் முடி யுமா ? அணுகுமுறை மட்டுமல்ல அடிப் படையே மாற்றப்பட வேண்டும்” என்கிற தெளிவான புரிதலோடு புறம், அகம் என இருநிலையிலும் ஆணாதிக் கத்தை அம்பலப்படுத்தி மாற்றுக்கான புள்ளிகளையும் முன்வைத்துள்ளது . வலுவான விவாதம் தேவை.கருத்துருவாக்கத்தில் இன்று பெரும் பங்காற்றும் ஊடக அரசியல் குறித்த விவாதம் துவக்கப்பட்டுள்ளது . அது போல் மாற்றுப் பண்பாட்டுக்கான சில முன்வைப்புகளும் உள்ளன .

இது தொடக்கமே . போதுமானதல்ல .பெண் களுக்கான பொதுவெளி கோயிலும் வழிபாடுகளுமே என குறுக்கப்பட் டுள்ள சமூகச் சூழலில் ; கலச வேள்வி , விளக்கு பூஜை , கூட்டுப் பிரார்த் தனை என பெண்களை மதவெறி சக்தி கள் திரட்டும் வேளையில் ; கூடிக்க ளிக்க பெண்களுக்கு முற்போக்காளர் கள் முன்வைக்கும் மாற்று என்ன என்ற கேள்வி எழுகிறது .பண்டிகைகள் , கொண்டாட்டங்கள் ஒரு சமூகத் தேவை . இவை இல்லாத உலகம் வெறு மையாக இருக்கும் . மதவெறி சக்திக ளிடமிருந்து மீட்கப்பட மக்களுக் கான புதிய கொண்டாட்டங்கள் உளப்பூர் வமாய் குடும்பம் குடும்பமாய் கொண் டாடும் நிகழ்வுகள் பற்றிய விவாதமும் முன்னெடுக்கப்பட வேண் டும்.உலகமயம் உருவாக்கியுள்ள நுகர்வுவெறிப் பண்பாடும் பண , பதவி மோகச் சூழலும் எல்லா பண்பாட்டுக் கூறுகள் மீதும் மிகவும் ஆழமான விரி வான தாக்கத்தை ஏற்படுத்தியிருக் கிறபோது அதைப்பற்றிப் பேசாமல் பண்பாட்டு விவாதம் முழுமையடை யாது ; கூர்மைபெறாது
. இதுவும் கல்வி குறித்த விவாதமும் பின்னர் மேற் கொள்ளப்படும் என முன்னுரையில் தமுஎகச மாநிலப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் வாக்குறுதி தந்துள் ளார். விரைந்து செய்ய வேண்டும் என்பது நம் அவா.மொத்தத்தில் காற்றில் முழம் போடாமல் ; வெறும் வாயை மெல்லாமல் கொஞ்சம் அவல் கொடுத்திருக்கிறது இந்த ஆவணம் . சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இந்த ஆவணத் தைப் படிக்க வேண்டும் - விவாதிக்க வேண்டும் ; புதிய மதச்சார்பற்ற ஜன நாயகப் பண்பாட்டுக்கான போராட்டம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு வர் மனதிலும் பக்குவமாய் அதேநேரம் சமரசமின்றி நடத்தப்பட வேண்டும். அதற்கு களம் அமைத்துள்ளது இந்த ஆவணம்.










 
 

0 comments :

Post a Comment