Posted by அகத்தீ Labels:

 

குட்டிக் கதை

 

தாத்தா இறந்து விட்டார் . அவர் நினைவஞ்சலி நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவரது போட்டோ சாமி படங்களின் நடுவே கூடத்தில் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது .  ஊதுபத்தியும் மணம் வீசத் தொடங்கிவிட்டது .

 

“ அப்பா ! ஏன்பா ! தாத்தா படத்துக்கு பூமாலை போடுறீங்க !”

 

“ தாத்தா சாமியாயிட்டாரும்மா ! அதுதான் மாலை எல்லாம் போட்டு கும்பிடுறோம்….”

 

“ அப்பா ! அந்த சாமி எல்லாம் கூட செத்துப் போச்சா ? அதுதான் மாலை போடுறோமா ?”

 

அப்பா திருதிருவென விழித்தார் .

 

சுபொஅ.

20/05/25.

0 comments :

Post a Comment