தேசபக்தி என்பது யாது ? சங்கி அகராதிப்படி அறிக !

Posted by அகத்தீ Labels:

 

தேசபக்தி என்பது யாது ? சங்கி அகராதிப்படி அறிக !

 

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதா ? இல்லவே இல்லை . நேரு தேசபக்தியே இல்லாதவர் . விடுதலைப் போரில் சிறையில் வாடிய கம்யூனிஸ்டுகள் தேச பக்தி அற்றவர்கள் . அப்போது காட்டிக் கொடுத்ததுதான் மாபெரும் தேசபக்தி .வாஜ்பாய் ,சாவர்க்கர் வழிதான் தேசபக்தி . பிரிட்டிஷாரின் ஷூவை நக்கியதுதான் தேசபக்தி . இன்னும் புரியலையா ?

 

கிரிக்கெட்டில் விளையாட்டு என்பதை மறந்து வெறுப்பை உமிழ்வதுதான் தேசபக்தி . தேசபக்தியும் மதவெறியும் ஒன்றுதான் .மதவெறியும் வெறுப்பு அரசியலும் ஒன்றுதான் . வெறுப்பு அரசியலும் மோடி பஜனையும் ஒன்றுதான் .ஆக , மோடி பஜனையே தேசபக்தி .

 

தேசபக்தி என்பது இந்து பக்திதான் .இந்து பக்தி என்பது பிராமணிய பக்திதான்.பிராமணிய பக்தி என்பது மனுஸ்மிருதி பக்திதான் . மனுஸ்மிருதி பக்தி என்பது ஆர் எஸ் எஸ் சொற்படி ஆடுவதுதான் . கலவர பக்திதான் . ஆக தேசபக்தி என்பது கலவர பக்தியே . அது கார்ப்பரேட்டை காக்கும் பக்தியே . அம்பானி அதானி நலமே தேசநலம் .கார்ப்பரேட் நலமே தேசநலம் .கார்ப்பரேட் பக்தியும் பிராமணிய பக்தியுமே தேசபக்தி .பொய்களையும் புராணங்களையும் கொண்டாடுவதே தேசபக்த அறிவு என்பதறிக !

 

இன்னும் தேசபக்தி என்பது இந்த மண்ணை ,மக்களை ,பன்மைப் பண்பாட்டை , பல்வேறு மொழிகளை , பல்வேறு மதங்களை ,வனத்தை ,கடலை , விவசாயிகளை ,உழைப்பாளிகளை நேசிப்பது என விளக்கம் சொல்லலாமோ ? அது முழுக்க முழுக்க தேசவிரோதம் என்பதறிக ! ஜனநாயகம் ,மதச்சார்பின்மை , சமத்துவம் ,சகோதரத்துவம் என்பதெல்லாம் தேசவிரோதச் சொல்களென அறிக ! வறுமை ,வேலையின்மை பற்றி கூப்பாடு போடுவது தேசவிரோதம் என்பதறிக !

 

இப்போது சொல் நீ தேச பக்தனா ? தேஷ்விரோதியா ?

 

சுபொஅ.

09/12/25.


0 comments :

Post a Comment