டீக்கணக்கு ….
சிறுவனாய் ஓடி ஆடி திரிந்த வேளை
காலையும் மாலையும்
அம்மா தந்த
அடிநாக்கில் இன்னும்….
விபரம் தெரிந்த பின்
காப்பி வில்லை , பஞ்சாரை [வெள்ளைச் சர்க்கரை] போட்ட
பால் ஊற்றிய காப்பி
சுவைக்கு பழகிய நாக்கு
தொழிலாளி ஆனபின்
மூன்று நான்கு வேளை
டீ க்கு அடிமையான நாக்கு…
திருமணத்துகு பின்
காலை பெட் காபி
அப்புறம் டீ
அவ்வப்போது
காபியும் கிடைக்கும்
பொதுவாழ்க்கைக்கு வந்தபின்
டீ இன்னொரு உணவானது
நாளைக்கு பத்தோ இருபதோ
கணக்கே இல்லாமல் நீண்டது ..
ஓய்வு பெற்றதும்
ஒட்டிக்கொண்ட சர்க்கரை வியாதி
தினசரி இரண்டு அல்லது மூன்று
சர்க்கரை இல்லா டீ
முதுமையின் அனுபவம்
சர்க்கரை இல்லா லெமன் டீ
புதினா டீ ,ஜீரக டீ , இஞ்சி டீ
ஏதோ ஒன்று
தினசரி இருமுறை …
எப்போதாவது
சர்க்கரை இல்லா டீயோ காபியோ…
அம்மா தந்த
கருப்பட்டி கடுங்காப்பி
அடிநாக்கில் இன்னும்….
சுபொஅ.
0 comments :
Post a Comment