இன்றெமது
அப்பத்தை
எனக்குத்
தந்த
ஆண்டவரே
!
அவன் சாப்பிடும்
அரிசியில்
அவன் பெயரை
எழுதிய
ஆண்டவரே
!
இவன் சாப்பிடும்
தயிர் சாதத்தில்
இவன் பெயரை
எழுதிய
ஆண்டவரே
!
அவன் சாப்பிடுகிற
பீஸாவில்
அவன் பெயரை
எழுதிய
ஆண்டவரே
!
இவன் சாப்பிடுகிற
பீப் பிரியாணியில்
இவன் பெயரை
எழுதிய
ஆண்டவரே
!
நீர் கொடுத்த
சாப்பாட்டில் பேதம் பார்த்து
ஒவ்வொருவரும்
அடித்துக் கொல்வது ஏன்
ஆண்டவரே
!
ஒவ்வோர் கவளம்
சாப்பாடும்
உம் கருணை
அல்லவா
ஆண்டவரே !
ஒரு சிலருக்கு
மட்டும்
ஆசீர்வதிக்கப்பட்ட
சாப்பாடு தரும்
ஆண்டவரே
!
எறும்புக்கும்
யானைக்கும்
அன்றாடம்
படியளக்கும்
ஆண்டவரே
!
கோடிக்கணக்கான
மக்களை
கொலைப்பட்டியில்
தள்ளுவது நியாயமா ?
ஆண்டவரே
!
இந்த பாவப்பட்டவரெல்லாம்
சாத்தானின்
பிள்ளைகளா
ஆண்டவரே
!
ஒருவர் கண்ணில்
வெண்ணை
ஊரார் கண்களில்
சுண்ணாம்பு
நியாயமா ஆண்டவரே
!
[ இது சாப்பாட்டின்
போது செய்ய விரும்பிய பிரார்த்தனை ]
சுபொஅ.
27/10/24.
0 comments :
Post a Comment