சாப்பிடும் அரிசியில்

Posted by அகத்தீ Labels:

 


இன்றெமது அப்பத்தை

எனக்குத் தந்த

ஆண்டவரே !

 

அவன் சாப்பிடும் அரிசியில்

அவன் பெயரை எழுதிய

ஆண்டவரே !

 

இவன் சாப்பிடும் தயிர் சாதத்தில்

இவன் பெயரை எழுதிய

ஆண்டவரே !

 

அவன் சாப்பிடுகிற பீஸாவில்

அவன் பெயரை எழுதிய

ஆண்டவரே !

 

இவன் சாப்பிடுகிற பீப் பிரியாணியில்

இவன் பெயரை எழுதிய

ஆண்டவரே !

 

நீர் கொடுத்த சாப்பாட்டில் பேதம் பார்த்து

ஒவ்வொருவரும் அடித்துக் கொல்வது ஏன்

ஆண்டவரே !

 

ஒவ்வோர் கவளம் சாப்பாடும்

உம் கருணை அல்லவா

 ஆண்டவரே !

 

ஒரு சிலருக்கு மட்டும்

ஆசீர்வதிக்கப்பட்ட சாப்பாடு தரும்

ஆண்டவரே !

 

எறும்புக்கும் யானைக்கும்

அன்றாடம் படியளக்கும்

ஆண்டவரே !

 

கோடிக்கணக்கான மக்களை

கொலைப்பட்டியில் தள்ளுவது நியாயமா ?

ஆண்டவரே !

 

இந்த பாவப்பட்டவரெல்லாம்

சாத்தானின் பிள்ளைகளா

ஆண்டவரே !

 

ஒருவர் கண்ணில் வெண்ணை

ஊரார் கண்களில் சுண்ணாம்பு

நியாயமா ஆண்டவரே !

 

[ இது சாப்பாட்டின் போது செய்ய விரும்பிய பிரார்த்தனை ]

 

சுபொஅ.

27/10/24.

 

 


0 comments :

Post a Comment