“நீங்கள் ஏன் கோவிலுக்கு வருவதில்லை ?”
ஊருக்கு ஆயிரம் கண்கள்.
எனக்கு கன்னடமோ
, இந்தியோ தெரியாது .ஆங்கிலமும் அரைகுறை .தமிழ் மட்டும்தான் தெரியும்.
பெங்களூர்
வந்த பின் ஊர் புதிது . நட்பு வட்டமும் இல்லை .முதலில் திணறினேன் . பின்னர் நடை பயிற்சி
வழி ஓர் முதியோர் வட்டம் நெருக்கமாக எலக்ட்ராணிக் சிட்டி நிலாத்திரி நகரில் வலம் வந்தேன்
. தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு ,வங்காளி என பலமொழி நண்பர்கள் .சாலை சாக்கடை வசதி என பொதுப்
பிரச்சனைகளில் முதியோர் நாங்கள் குடியிருப்போர் சங்கம் வழி தலையிட 2013 -2017 வரை அங்கு
ஊரறிந்த “சீனியர் சிட்டிசன்ஸ்” ஆனோம்.
2017 பொம்மசந்த்ரா
காச்சநாய்க்கன்ஹள்ளியில் போலீஸ் லே அவுட் அருகே
ஓர் அடுக்ககத்தில் மகன் வீடு வாங்க குடியிருப்பு மாறியது . அடுக்ககத்தில் எல்லோருடனும்
அறிமுகமானவரானேன். எல்லோரும் மிகுந்த மரியாதை
தந்தனர் . அன்பைக் கொட்டினர் .ஆனால் அந்த மரியாதையே எல்லோரிடமும் ஓர் மரியாதைக்குரிய
தூரத்தையும் தொடரச் செய்துவிட்டது.
தற்செயலாக
அசோக் லேலண்டு தோழர் பன்னீர் செல்வம் அவர்களைச்
சந்திக்க இருவரும் எங்கும் சுற்றினோம். இப்போது அவரும் ஓசுரூக்கே மீண்டும் சென்றுவிட்டார்
.
நான் நினைப்பேன்
, “இங்கு யாரையும் எனக்குத் தெரியாது .” ஆயின் அனுபவம் வேறாக இருக்கிறது . “ஊருக்கு
ஆயிரம் கண்கள்” என்பதை நிறைய சம்பவங்கள் சொல்லிச் செல்கிறது . ஒன்றிரண்டு சுவரசியமான
செய்திகளைக் கூறுவேன்.
சில நாட்கள்
முன்பு நடை பயிற்சி முடித்து வரும் போது , நடை பாதையில் ஒரு பழவண்டிக்காரியிடம் பழங்கள்
வாங்கினேன். அவர் கேட்டார் ,” சார்! போலீஸ் லே அவுட்டா ? அபார்ட் மெண்டா ?” நான் சொன்னேன்.”
அபார்ட் மெண்ட்” . அந்த அம்மா சொன்னார் , “ நீங்க டெய்லி வாக்கிங் போவதைப் பார்ப்போம்.
நீங்க ஒரு நாள் கூட ஒயின் ஷாப்பில நுழைஞ்சு பார்க்கலை . எங்களுக்கு உங்கள பிடிக்கும்
.அண்ணைக்கு ஒரு லேடி அந்த காய்கறி அம்மாவிடம் அதிகமாக பேரம் பேசியபோது ,நீங்க வந்து
பேரம் பேசாமல் காய்கறி வாங்கினது மட்டுமல்ல ;அந்த லேடியிடம் ஆண் லைன்ல பேரமா பேசுறீங்க
… இவங்க கொள்ளை அடிச்சு பங்களவா கட்டப் போறாங்க … என எங்களுக்காகப் பேசுனதை நாங்க எல்லோரும்
பேசி பேசி சந்தோஷப்பட்டோம்…” இப்படி அந்த அம்மா பேசின போது ஊரு நம்மை உற்றுப் பார்ப்பது
தெரிந்தது . கன்னடம் கலந்த தமிழில் பேசினாலும் புரிந்தது .
நான் வழக்கமாக
வாக்கிங் போகும் போது வழியில் பலர் வணக்கம் சொல்வார்கள் .நானும் சொல்வேன் .பேச்சு கிடையாது
. ஒரு வீட்டு வாசலில் அம்மா ,மகள் ,பேத்தி என நிற்பார்கள் .நானும் அவர்களும் பரஸ்பரம்
வணக்கம் சொல்லுவோம். அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தெலுங்கு குடும்பம் . தமிழ்
பேசுவார்கள் . கொரானா காலம் நடை பயிற்சியை முடக்கிப் போட்டது . அதன் பின் நடை பயிற்சி
தொடர்ந்த போது அவர்கள் உரையாடினர் . அண்மையில் ஒரு நாள் அவர்களைக் கடக்கும் போது “ சார் !” என அழைத்தனர்.
“ நீங்க ஐயரா
? அய்யங்காரா ?”- பாட்டி கேட்டார் .
“நான் மனுஷன்…”
என் பதில்.
“ இல்லை சார்
! நான் நீங்க ஐயர் அல்லது அய்யங்கார்ன்னு சொல்றேன் .என் மகள் முதலியார் ,கவுண்டர்ன்னு
எதாவதுதான்னு சொல்றா ,எம் பேத்தி கிறிஸ்டியன்னு சொல்றா நீங்க யாரு ?”
“ நான் மனுஷன்மா
! எனக்கு சாதியும் இல்லை .மதமும் இல்லை …” என நான் பேசி முடிக்கும் முன்பே ,
“ அப்ப நீங்க
கறுப்புச் சட்டை பெரியார் கட்சியான்னு…” பாட்டி கேட்டார் .
“ எனக்கு
பெரியாரைப் பிடிக்கும் .நான் கம்யூனிஸ்ட்ன்னு” சொன்னேன்.
எல்லோரும்
சிரித்து விடை கொடுத்தனர் .இப்போதும் அவர்களை கடக்கும் போது தினசரி வணக்கம் சொல்கிறேன்
; அவர்களும் புன்னகையோடு வணக்கம் சொல்கின்றனர் .
இன்னொரு அனுபவம்
போலீஸ் லேஅவுட் நண்பர்கள் என்னை சாட்டர்டே பார்ட்டிக்கு அழைத்தனர் . எல்லாம் மது குடிக்கத்தான்
. கைச் செலவு கிடையாது .யாராவது ஸ்பான்சர் பிடிப்போம் என்றனர் .அதில் எல்லோரும் ரிட்டர்யைடு
போலீஸ்..” , [ பன்னீர் செல்வம் மூலம் அறிமுகமான] ஒரு ரிட்டயர்டு போலீஸ் அதிகாரி இவரு
தீக்கதிரு இதில் எல்லாம் பங்கேற்க மாட்டாருன்னு சொல்ல … எல்லோரும் விளக்கம் கேட்க என்னைப்
பற்றி ஒரு குட்டி அறிமுகம்..”
எல்லோரும்
கை கொடுத்தனர் .பார்ட்டிக்கு அழைத்ததவர் ஸாரி
கேட்டார் . அதன் பின் பார்க்கும் இடத்தில் எல்லாம் எல்லோரும் வணக்கம் சொல்வார்கள்
.சிலர் காம்ரேட் என அழைத்து நமஸ்காரம் சொல்வார்கள் . ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்று சில இளைஞர்கள் என்னை
மறித்து நன்கொடை புத்தகத்தை நீட்டினார்கள் .பார்ட்டிக்கு அழைத்தவர் தலையிட்டு ,” சார்
!கம்யூனிஸ்ட் ! அவர விட்டுருங்க..” என்றார் . அதன் பின்னர் அந்த இளைஞர்களும் வழியில்
புன்னகையோடு வணக்கம் சொல்கின்றனர் .ஊர் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கிறது .
இப்படி நிறைய
சொல்லிக் கொண்டே போகலாம். இன்னொரு சம்பவம் முன்பே சொல்லியிருக்கிறேன் .மீண்டும் சொல்வதில்
பிழையில்லை.
அடுக்ககம்
வந்து ஒரு ஆறேழு மாதங்கள் ஆகி இருக்கும் . நான் நடை பயிற்சி செல்லும் போது ஒருவர் குறுக்கே
பைக்கை நிறித்தினர் . “சார் !உங்கள டெய்லி
பார்க்கிறேன். பேசணும் ”என்றார் . “சரி” என்றேன்.
“ நீங்க கிறிஸ்டியனா ?”
“ இல்லை.”
“ உங்களப் பார்த்த முஸ்லீம் மாதிரியும் தெரியலையே..”
“ என்ன விஷயம் சார்!”
“ நான் இங்கு
கவுன்சிலர் …பிஜேபி..”
“ தெரியும்
சார் ! நண்பர்கள் சொன்னார்கள்..”
“ ஓண்ணு மில்லே நீங்க டெய்லி இப்படி போறீங்க அனுமார்
கோயில் பார்த்து ஒரு நாள் கூட கும்பிட்டதா தெரியலை … உங்க மகன் ,மருமகள் ,மனைவி யாரும்
கோவில் பக்கம் வந்ததாத் தெரியவில்லை …”
“ நான் சிரித்தேன் …உங்க நம்பிக்கை வேற என் நம்பிக்கை
வேற நான் சயின்சை மட்டுமே ஏற்பவன்…”
“ சார் !
நீங்க பெரியார் கட்சியா ?”
“ இல்லை.பெரியாரைப்
பிடிக்கும் . நான் கம்யூனிஸ்ட் .சிபிஎம்…” என்றேன்.
“ அதனாலென்ன பரவாயில்லை … ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு பிடிச்ச கட்சி … உங்க வீட்ல யாருமே சாமி
கும்பிட மாட்டாங்களா ?”
“ என் மனைவி
எப்போதாவது கோவிலுக்கு செல்வதுண்டு .பூஜை ,படையல் எல்லாம் எங்க வீட்ல எப்போதும் கிடையாது…”
“ தெரிஞ்சுக்கிறதுக்குத்தான் கேட்டேன் … தப்பாக நினைக்காதீங்க…”
என்றார்
“ தெரிஞ்சிக்கிறது
தப்பே இல்லை” என்றபடி விடை பெற்றேன்.
அப்புறம்
பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்வதோடு சரி ! அங்கு சாமுண்டேஸ்வரி கோயில் கட்ட நிதி
வசூலித்துக் கொண்டிருந்த போது ஒரு கும்பலோடு எதிர் கொண்டேன் .மற்றவர் நிதி கேட்க ”சார்
! கம்யூனிஸ்ட் ஜெர்னலிஸ்ட் மீடியா ஆளுன்னு “ சொல்லி மற்றவர்களை விலக்கிவிட்டார் .எல்லோரும்
விடை பெற்றனர்.
ஊருக்கு ஆயிரம்
கண்கள் …
உன்னைப் பார்த்துக்
கொண்டே இருக்கிறது …
சுபொஅ.
31/3/2023.
0 comments :
Post a Comment