வீழ்ச்சியை எழுச்சியை விளங்கிக் கொள்ள...
சோஷலிசம்மார்க்ஸ், எங்கெல்ஸ்,லெனின், ஸ்டாலின், மாசேதுங்
தொகுப்பு: இர்ஃபான் ஹபீப்
தமிழில்: இலக்குவன்வெளீயிடு: பாரதி புத்தகாலயம் 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018
பக்: 302 விலை: ரூ. 170/-
‘‘சோஷலிசம்
என்றால் என்ன? கம்யூனிசம் என்றால் என்ன? இரண் டுக்கும் என்ன வித்தியாசம்?
இவற்றை அறிந்து குழப்பி அல்லது தப்பும், தவறுமாய் புரிந்து கொண்டு
விமர்சனம் செய்பவர்களே அதிகம். மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட கட்சியினரிடையே
கூட இது பற்றிய புரிதல் குழப்பம் உண்டு. அதன் விளைவு எதிரிகள் விமர்ச
னங்களாலும் எதிர்பாரா திருப்பங்களாலும் நிலை குலைந்து எதிர்நிலை எடுக் கிற
அபாயம் கூட நேரிடுகிறது. ஆகவே ‘சோஷலிசம்’குறித்த மிகச் சரியான புரிதல்
முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் தேவைப்படுகிறது. இந்த காலத்தேவையை
ஈடுசெய்ய இப்புத்தகம் பெரும் வழிகாட்டியாகும் என்பதில் ஐயமில்லை.
சோஷலிசம்
குறித்து மார்க்சும் எங்கெல்சும் சில அடிப்படையான கருத்துகளை மட்டுமே
அளித்துள்ளனர். லெனின் சோஷலிச அமலாக்கத்தில் சில பிரச்ச னைகளை
கையாண்டுள்ளார். ஸ்டாலின், மாசேதுங் அன்றைய தேவைக்கு மேலும் விளக்கங்களை
அளித்துள்ளனர். இவற்றை தொகுத்துப் படிக்கும் போது சோஷலிசம் பற்றிய புரிதல்
மேலும் கூர்மையாகும். அதற்கு இத்தொ குப்பை வாசித்தல் அவசியம்.
“மார்க்சிய
மரபு வழி வந்துள்ள முக்கிய தலைவர்களின் படைப்புகளின் தேர்ந் தெடுக்கப்பட்ட
சில பகுதிகளை உள்ளடக்கிய இந்த நூலானது சோஷலிசம், லட்சியம் மற்றும்
அதுவிடுக்கும் சமூக விடுதலைச் செய்தி மற்றும் அது எதிர் கொண்ட பிரச்சனைகள்
குறித்த ஒரு எளிய அறிமுகமாக நம்பிக்கையுடன் கருதப்பட வேண்டும்” என
முன்னுரையில் இர்ஃபான் ஹபீப் விடுத்துள்ள வேண்டுகோள் பொருட்
செறிவுள்ளது.
"..வழிகாட்டும் தத்துவமாக மார்க்சியம் நமது நாட்டின் பெரும்பாலான
மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அதனை விமர்சனம் செய்யலாமா ? நிச்சயமாக
அதனை விமர்சனம் செய்யலாம். மார்க்சியம் என்பது விஞ்ஞான உண்மை-அது எந்த விமர்சனத்துக்கும் அஞ்சாது. அது விமர்சனத்தைக் கண்டு அச்சமடையுமானால் -விமர்சனத்தின் மூலம் அதனை முறியடிக்க
முடியும் என்றால் அது பயனற்றதாக இருக்கும்" என்றார் மாசேதுங்.ஆம் விமர்சனங்களோடு வளர்ந்த்ததுதானே மார்க்சியம்.இந்த நுல்
“பொரு ளாதார
ஆதாரங்களின் பற்றாக்குறையை ஒரு சீதனம் போலப் பெற்று உருவா கும்
முதலாளித்துவத்துக்குப் பிந்தைய சமுதாயமானது எத்தகையப் பிரச்ச னைகளைத்
தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த மார்க்சின் மனக்காட்சி
இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது”.இர்ஃபான் ஹபீபின் குறிப்போடு மார்க்சின்
எழுத்துகளை வாசிக்கும் போது புதிய வெளிச்சம் நிச்சயம் கிடைக்கும். அதுபோல் “
சமுதாயம், தத்துவம் மற்றும் சோஷலிசம் பற்றிய டூரிங்கின் முற்போக்கான அனல்
கருத்துகளை எதிர்த்து நடத்தியக் கருத்துப் போராட்டத்தின் விளைவாக
டூரிங்குக்கு மறுப்பு எனும் நூல் எழுதப்பட்டது.டூரிங்கின்
கருத்துகளை நிராகரிக்கும் விதத்தில் எழுதும்போது எதிர்கால சோஷலிச சமுதாயம்
உள்ள விரிவான பரப்பின் மீது அவர் கவனம் செலுத்திஇருக்கிறார்” என்று கூறும்
இர்ஃபான் ஹபீப், அவற்றை தேர்வு செய்து நம்முன் படைத்துள்ளார்.
சோஷலிசம்,
கம்யூனிசம் ஆகிய இரு தொடர்ச்சியான கட்டங்களில் அரசு குறித்து லெனின் கூறிய
கருத்துக்கள் அரசும் புரட்சியும் என்ற நூலிலிருந்து தொகுத்துத்
தரப்பட்டுள்ளது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் தேவை குறித்து லெனின்
கருத்துகள் இந்த அத்தியாயத்தில் விரிவாக இடம்பெற்றுள் ளது. அதே நேரத்தில்
கடைசி அத்தியாயத்தில் “ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதன் பொருள்
ஆம் ஒரு கட்சி சர்வாதிகாரம்’ என்று துரதிர்ஷ்ட வசமாக லெனின் அவர்களே ஒரு
முறைக்கு மேலாகக் குறிப்பிட்டுள்ளார்” என்று சுட்டிக்காட்டும் இர்ஃபான்
ஹபீப் அதனை விமர்சனப்பூர்வமாக அணுகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சோவியத்
யூனியனில் சோஷலிசக் கட்டுமானத்தின்போது ஏற்பட்ட பிரச்சனைகளை ஸ்டாலின் அலசி
தீர்வு சொல்லி இருப்பது போதுமான அளவு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இதைத்
தொடர்ந்து வரும் அத்தியாயங் களில் மாசேதுங்கும், இர்ஃபான் ஹபீபும்
முன்வைக்கும் விமர்சனங்களை இணைத்து பார்க்கும் போது நமது பார்வை
விசாலப்படுவது திண்ணம்.
“சோஷலிசம் என்பது வெகுதொலைவிலான
எதிர்காலம் தொடர்பான ஒரு நிகழ்வோ அல்லது ஒரு கருத்தளவிலான சித்திரமோ அல்லது
வழிபாட்டுச் சின்னமோ அல்ல. அத்தகைய வழிபாட்டுச் சின்னங்கள் குறித்த நமது
பழைய காலத்தை மட்டமான கருத்தையே நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
சோஷலிசத்தை நாம் அன்றாட வாழ்க்கைக்குள் இழுத்து வந்துள்ளோம்” என்று
ஸ்டாலின் கூறும்போது நடைமுறையும் உரசிப்பார்க்கும் ஆர்வமும் அவசியம்
புலனாகும்.
மாசேதுங் 1956ல் எழுதிய ‘பத்து முக்கிய உறவுகள் மக்களிடையே
நிலவும் முரண்பாடுகளை சரியாகக் கையாளுவதே, அவற்றோடு சோவியத் யூனிய னில்
சோஷலிச கட்டுமானத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து குறிப்பாக ஸ்டாலின்
காலம் குறித்து எழுதிய விமர்சனம் ஆகியவற்றை இர்ஃபான் ஹபீப் தேர்வு செய்து
தொகுத்திருப்பது ஒரு ஆழமான பகுப்பாய்வுக்கு நம்மை உந்தித்தள்ளும்
முயற்சியாகும்.இந்த புத்தகத்தை படிக்கிற ஆர்வம் இருப்பினும் முதல் சில
அத்தியாயங்க ளில் நம்மால் முழுமையாக ஈடுபடுவது சற்று சிரமமே. ஆனால்
மாசேதுங் சிந்தனைகளிலிருந்து தொகுக்கப்பட்டவைகளை குறிப்பாக முரண்பாடு களை
கையாளுவது குறித்த அத்தியாயத்தை முதலில் படித்துவிட்டு, மாசேதுங்கின் இதர
அத்தியாயங்களையும் படித்துவிட்டு மீண்டும் முதல் அத்தியாயம் தொடங்கி
முழுவதும் வாசிக்க முயற்சித்தால் ஆர்வத்தை கிளர்ந்துவிடும் என்பது என்
தனிப்பட்ட கருத்தாகும்.
“டைபாய்டு காய்ச்சல் வந்தவர்களுக்கு அந்த நோய்க்கு
எதிரான பாது காப்பு சக்தி வந்துவிடுகிறது, இதேபோல் தவறிழைத்தவர்கள்
படிப்பினை பெறும் திறன் கொண்டவர்களாக இருந்தால் முன்பை விட குறைவான எண்
ணிக்கையில் தான் தவறிழைப்பார்கள். மறுபுறத்தில் தவறிழைக்காதவர்க ளுக்கு
எளிதாகத் தலைக்கனம் வந்துவிடும். ஆதலால் அவர்கள் தவறிழைப் பதற்கான
வாய்ப்புகள் ஏற்படுகின்றன. நாம் கவனமாகச் செயல்படுவோம்.
மற்றவர்கள் தவறிழைத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டுபவர்கள் பல நேரங்க ளில்
தாங்களே சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்” என மாசேதுங் அனுபவச் செறிவோடு
சுட்டுவது நம்மை உலுக்குகிறது .“நூறுபூக்கள் மலரட்டும்” என்ற மாசேதுங்கின்
முழக்கத்தின் தேவையும் அதன் கருத்தாழமும் ஊன்றி கவனித்து
உள்வாங்கத்தக்கன.
இறுதியாக ஒரு ஆய்வுக் கண்ணோட்டத்தில் “சோஷலிசம் குறித்த
மார்க் சிய சித்தாந்தமும் சோஷலிச சமுதாயங்களின் அனுபவங்களும்” குறித்து
இர்ஃபான்ஹபீப் கட்டுரை முத்திரை பதிக்கிறது. “சோவியத் யூனியனிலும் கிழக்கு
ஐரோப்பியாவிலும் சோஷலிசம் வீழ்ச்சி அடைந்தது ஒரு பின்ன டைவுதான் என்பதில்
சந்தேகமில்லை. அந்த வீழ்ச்சி நமது கண்களுக்கு புலப்படுத்தியவற்றின் மூலம்
நம்முடைய பிரம்மைகள் பலவும் அகற்றப்பட் டன” என்று கூறும் இர்ஃபான் ஹபீப்,
அதைத் தொடர்ந்து கூறுகிறார், “ஆனால், அவை பல இன்றியமையாத உண்மைகளையும் கூட
நமக்கு மீண்டும் தெரிவித்துள்ளன. இவை உலக முதலாளித்துவத்துக்கு எதிராகவும்
சோஷலிசத்துக்கு ஆதரவானதுமான போராட்டத்தை உறுதிப்படுத்தவும் மக்கள் சக்திகளை
உறுதியான முறையில் அணிதிரட்டுவதற்கும் நமக்கு உதவி புரிய வேண்டும்.
ஏனெனில் சுதந்திர ராஜ்யமானது முன்னெப்போதும் இல்லாத பிரகாசத்துடன்
கையசைத்து நம்மை அழைக்கிறது”ஆம்“இன்றியமையாமையின் சாம்ராஜ்யத்திலிருந்து
சுதந்திரத்தின் சாம்ராஜ்யத்தை நோக்கி மேலே செல்வதற்காக மனிதகுலம் எடுத்து
வைக்கும் முதலடிதான் சோஷலிசம் என்று மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவரும்
குறிப்பிட்டுள்ளனர்” அல்லவா?
இந்தத் தொகுப்பு நூலை மூன்று காரணங்களுக்காக
அனைவரும் வாசித்திட வேண்டும்.1. சோஷலிசம், கம்யூனிசம் பற்றிய புரிதலை
வரலாற்று ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அறிந்துகொள்ள இந்நூல்
உதவும்.2. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் மூல நூல்களை
படித்திடாத அல்லது படிக்க வாய்ப்புகிடைக்காத இன்றைய தலைமுறையினர் அந்த
மூவர்களின் முக்கியப் படைப்புகளை அறிந்திட இந்நூல் வழிகாட்டு கிறது.3.
சோவியத் யூனியன், மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பின்ன டைவுக்குப்
பிறகும் சோஷலிசம் எப்படிச் சரியானது, தேவையானது என்பதை விமர்சன பூர்வமாக
அறிந்திட உதவும் நூல். படிக்க - பாதுகாக்க வேண்டிய நூல், கி. இலக்குவனின்
மொழிபெயர்ப்பு நன்று. பாராட்டுக்கள்.
0 comments :
Post a Comment