க.சரவணனின் ‘ அன்பிற்கினியாள் , “ மொத்தம் 14 கதைகள் .அத்தனையும் நீள் கதைகள்” என்பார் ஓவியர் ஸ்ரீரசா .
சமூகத்தின் புண்களை அப்படியே எழுதிச் செல்வது ஓர் வகை . இப்படி சிலராவது யோசித்திருக்கலாமே என்கிற கோணத்தில் கதா பாத்திரங்களை கற்பனை செய்து படைப்பது இன்னொரு வகை . இரண்டும் கலந்தது இச்சிறுகதைகள் .
இடிந்து விழும் நிலையிலுள்ள ஓர் அரசு பள்ளிக்கட்டிடத்தைக் கண்டு பதைபதைக்கும் ஓர் தலைமையாசிரியரும் கரடுதட்டிப்போன அரசு இயந்திரமும்” மேற்கூரை” கதையில் நம்மை பதைபதைக்க வைக்கின்றன.
“டிபன் பாக்ஸ் ”மாறிப்போனதை வைத்து சொல்லும் சேதி மிகப்பெரிது . சுய விமர்சனத்தோடு பிரச்சனைகளை அணுகச் சொல்லும் “நீலதிமிங்கலம்” இப்படி ஒவ்வோர் கதையும் ஓர் சமூகச் செய்தியை உள்ளடக்கி உள்ளது . பொறுப்பான ஆசிரியராக க.சரணன் நூல் நெடுகவும் , நூலுக்கு வெளியேவும் வெளிப்பட்டுள்ளார் .
தொடர்ந்து எழுதி உச்சம் தொட வாழ்த்துகள் !
அன்பிற்கினியாள் , சிறுகதைத் தொகுப்பு , க.சரவணன் , பாரதி புத்தகாலயம் ,பக்கங்கள் 216 ,விலை : ரூ .240/.
சுபொஅ.
15/07/25.
No comments:
Post a Comment