Pages

Sunday, 16 May 2010

செம்மொழி வாழ

மிழ் செம்மொழி
கேட்க பேச இனிமையானது
பழமையானது
இலக்கிய வளம் மிக்கது
வாழ்வியல் நுட்பமுடையது
எல்லாம் சரி எல்லாம் சரி

ஒற்றை கலாச்சார நுகத்தடியில்
உலகை பிணைக்க
வாய்பிளந்து நிற்கும்
உலகமய பூதம்
ஆங்கிலம் மட்டுமே அறியும் என்பதால்
எல்லா மொழியும் மிதி படும்போது
என் தமிழ் என் செய்யும் ?

அனைத்து மொழிக்கும் ஆபத்து
உலகம் முழுதும் உரக்க குரலெடுத்து
எல்லோரோடும் தோள்கொடுத்து
மொழி வழி இன வழி
பன்முக உலகை காத்திட
எது வழி என்றே நீ யோசி

போற்றி பஜனையில்
வாழ்த்து மழையில்
வாழ்த்தி மகிழ்ந்தால்
வாழுமோ தமிழ் ?

மாறும் உலகை மனம் கொண்டு
மர்ற்றம் பல நாம் கண்டு
புதுயுக தமிழை
ஆயுதமாக்கு
உட்பகையை உலகபகையை
நொறுக்கி தள்ளு
செம்மொழி காக்க
செம்பாதை இதுவே
சுபொ அகத்தியலிங்கம்

No comments:

Post a Comment