
ஈகோ எனப்படுவது
ஈகோ எனப்படும் தன்னகங்காரம்
தலை நீட்டாத மனிதர்களைத் தேடுகிறேன்
என்னகஙகாரத்தை நான் மறந்து
சாடுகிறேன் பிறரை
உன்னகங்காரத்தை நீ மறந்து
சாடுகிறாய் என்னை
உன்னை காயப்படுத்தியது ஏது ?
என் வெற்றியா ? என் வார்த்தையா?
உன் கோபத்தின் மூலம் ஏது ?
இயலாமையா? தோல்வியா?
உன்னையே கேட்கிறேனே
என்னை அப்படி ஆக்கியது எது?
தனிமையில் யோசிக்க யோசிக்க
வெட்கம் பிடுங்கி தின்கிறது
ஆயினும்
உன்னை அணைக்க
உண்மையை உரைக்க
என்னை தடுப்பது எது ?
அது சரி
ஈகோ என்பது ....
Sa.Tamilselvan>>>have you read this poem ?
ReplyDelete