Pages
▼
Wednesday, 2 June 2010
ஞானோதயம்
புத்தருக்கு போதி மரத்தடியில்
ஞானம் கிடைத்ததா?
நானும் அங்குதான்
குடிஇருக்கிறேன்
ஞானம் வரவில்லையே ..
புத்தருக்கு போதிமரம்
ஞானம் தரவில்லை
முடிவற்ற தேடல்
ஞானமானது ..அதுவே
புத்தமானது
தேடல் நின்றுபோனால்
புத்தன் கடவுள் ஆவான்
புத்தம் தோற்று போகும்
பசி மறந்து தூக்கம் மறந்து
பல நாட்கள் தவம் இருந்து
புத்தன் கண்ட பலன் ஒன்றுமில்லை
ஒரு அதிகாலை நேரம்
விறகொடிக்கும் பெண்கள்
பாடிச் சென்ற பாடலைக் கேட்டான்
யாழின் நரம்பை இறுகக் கட்டாதே
நரம்பு அறுந்துபோம்
நாதம் தொலைந்துபோம்
யாழின் நரம்பை தளர்வாய் கட்டாதே
நாதம் எழும்பாது கீதம் இனிக்காது
மனதும் லயிக்காது
யாழின் நரம்பை மிதமாய் கட்டு
விரலால் நரம்பை இதமாய் மீட்டு
இதயம் முழுதும் இசையில் நனையும்
இந்த பாடல் வரிகளில்
ஞானம் பிறக்க
புத்தன் குதித்தான்
பாவம் போதி மரம்தான்
ஞானம் தந்ததாய்
மக்கள் நினைத்தனர்
புத்தன் சிரித்தான்
சுபொ
புத்தருக்கு போதி மரத்தடியில்
ஞானம் கிடைத்ததா?
நானும் அங்குதான்
குடிஇருக்கிறேன்
ஞானம் வரவில்லையே ..
புத்தருக்கு போதிமரம்
ஞானம் தரவில்லை
முடிவற்ற தேடல்
ஞானமானது ..அதுவே
புத்தமானது
தேடல் நின்றுபோனால்
புத்தன் கடவுள் ஆவான்
புத்தம் தோற்று போகும்
பசி மறந்து தூக்கம் மறந்து
பல நாட்கள் தவம் இருந்து
புத்தன் கண்ட பலன் ஒன்றுமில்லை
ஒரு அதிகாலை நேரம்
விறகொடிக்கும் பெண்கள்
பாடிச் சென்ற பாடலைக் கேட்டான்
யாழின் நரம்பை இறுகக் கட்டாதே
நரம்பு அறுந்துபோம்
நாதம் தொலைந்துபோம்
யாழின் நரம்பை தளர்வாய் கட்டாதே
நாதம் எழும்பாது கீதம் இனிக்காது
மனதும் லயிக்காது
யாழின் நரம்பை மிதமாய் கட்டு
விரலால் நரம்பை இதமாய் மீட்டு
இதயம் முழுதும் இசையில் நனையும்
இந்த பாடல் வரிகளில்
ஞானம் பிறக்க
புத்தன் குதித்தான்
பாவம் போதி மரம்தான்
ஞானம் தந்ததாய்
மக்கள் நினைத்தனர்
புத்தன் சிரித்தான்
சுபொ
No comments:
Post a Comment