Pages

Thursday, 26 May 2016

பகலில் - இரவில்













பகலில் - இரவில்


நிலவு நேற்றே தற்கொலை செய்துகொண்டது
என
பகலில் சொன்னான்


சூரியன் செத்துவிட்டது
என
இரவில் சொன்னான்


கடல் இடம்மாறிவிட்டது
என
மழைக்காலத்தில் சொன்னான்


ஊரே எரிகிறது
என
கோடையில் சொன்னான்


வாழ்வைத்த தெய்வம்
என
வெற்றியில் கொண்டாடினான்


முதுகில் குத்திவிட்டான்
என
தோல்வியில் புலம்பினான்


தனக்கு மட்டுமே எல்லா துயரமும்
என
ஓயாது சலித்துக்கொண்டான்

எல்லாவற்றையும் எப்போதும்
மிகையாகவே பார்த்தான்

யதார்த்தத்தில் காலூன்றவே இல்லை .

No comments:

Post a Comment